வரலாற்றில் முதல்முறையாக ராணுவ நடவடிக்கைக்கு சுதந்திரம் கொடுத்தார் பிரதமர்: ராணுவ தளபதி திரிவேதி பெருமிதம்
போபால்: ''பாகிஸ்தான் மீதான ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது ராணுவத்திற்கு பிரதமர் மோடி முழு சுதந்திரம் கொடுத்தார். இந்திய வரலாற்றில் இது முதன் முறை நடந்தது'' என ராணுவ தளபதி உபேந்திர திரிவேதி தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தின் ரேவாவில் உள்ள கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் உபேந்திர திரிவேதி பேசியதாவது: எல்லையில் இருந்தாலும் சரி, பயங்கரவாதமாக இருந்தாலும் சரி, இயற்கை பேரழிவுகளாக இருந்தாலும் சரி, சைபர் அச்சுறுத்தலாக இருந்தாலும் சரி, பாதுகாப்பு நமது ராணுவத்தில் மிகப்பெரிய சவாலாக இருக்கின்றன. நீங்கள் ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது கேள்விப்பட்ட படி, கராச்சி தாக்கப்பட்டது. எங்கள் கொள்கைகள் மற்றும் தொழில்நுட்பத்தின் ஒருங்கிணைந்த பலத்துடன் நாங்கள் போராடியதால் ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கை வெற்றி பெற்றது.
பாகிஸ்தானில் எந்த அப்பாவி மக்களும் பாதிக்கப்படக்கூடாது என்பதை நாங்கள் வலியுறுத்தினோம். பயங்கரவாதிகளையும், அவர்களுக்கு ஆதரவு அளிப்பவர்களையும் மட்டுமே நாங்கள் குறிவைத்தோம். ஆப்பரேஷன் சிந்தூர் ஒரு ராணுவ வெற்றி மட்டுமல்ல, இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் அமைதியை மீண்டும் நிலைநாட்டுவதற்கான ஒரு பணி. இந்த நடவடிக்கைக்கு பிரதமர் மோடி தான் பெயரிட்டார்.
இந்திய வரலாற்றில் முதல் முறையாக, முக்கியமான தேசிய பாதுகாப்பு நடவடிக்கைகளின் போது, பிரதமர் மோடி ராணுவத்திற்கு பிரதமர் மோடி முழு சுதந்திரம் அளித்தார். ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது தைரியம், தன்னம்பிக்கை மற்றும் அமைதி ஆகிய மூன்று முக்கிய கொள்கைகள் ராணுவத்தினரை வழிநடத்தியது. இவ்வாறு ராணுவ தளபதி உபேந்திர திவேதி பேசினார்.
வாசகர் கருத்து (9)
Indian - kailasapuram,இந்தியா
02 நவ,2025 - 12:00 Report Abuse
பா ஜா கட்சிக்கு அடுத்த மெம்பெர் ரெடியாய் இருக்கார் 0
0
Reply
Gnana Subramani - Chennai,இந்தியா
02 நவ,2025 - 09:05 Report Abuse
1971இல் ராணுவத்துக்கு முழு சுதந்திரம் கொடுக்கப் பட்டது. இந்திரா காந்தி சொன்ன நேரத்தில் தாக்குதல் நடத்த மனெக்ஷா மறுத்து காரணத்தை விளக்கினார். அதனை இந்திரா ஒத்துக் கொண்டு ராணுவம் விரும்பிய நேரத்தில் தேவைப்பட்ட முறையில் தாக்க முழு சுதந்திரம் கொடுத்தார். அரசியல்வாதிகள் பொய் பேசலாம் ராணுவ தளபதி பொய் பேச கூடாது 0
0
ஆரூர் ரங் - ,
02 நவ,2025 - 09:38Report Abuse
1971 இல் ராணுவம் கைது செய்திருந்த 99000 பாக் ராணுவ வீரர்களை ராணுவத்தைக் கேட்காமலே விடுதலை செய்தார் இந்திரா. மேலும் பாக் பிடியிலிருந்த 20 க்கும் மேற்பட்ட பாரத விமானப் படை அதிகாரிகளை விடுவிக்க முயற்சிக்கவுமில்லை. அவர்கள் பாகிஸ்தான் சிறைக்குள்ளேயே மாண்டனர். என்ன ஒரு சுதந்திரம்? இலங்கைக்கு அனுப்பப்பட்ட அமைதிப்படையின் கைகளை பின்பக்கமாக கட்டிப்போட்டு சண்டையிட உத்தரவிட்டது ராஜிவ். விளைவாக 1400 வீரர்களை இழந்த கொடுமை. 0
0
MUTHU - Sivakasi,இந்தியா
02 நவ,2025 - 09:50Report Abuse
ராணுவ நடவடிக்கையினை குறிக்கோள் அடையும் வரை நிறுத்தக்கூடாது என்ற உறுதி மொழிதான் மானெக்ஸ் எதிர்பார்த்தார். 0
0
KOVAIKARAN - COIMBATORE,இந்தியா
02 நவ,2025 - 10:20Report Abuse
ஞான சுப்ரமணி அவர்களின் கருத்து மிகவும் தவறு. 1971 இந்தியா பாகிஸ்தான் போரில், இந்தியா வெற்றிபெற்று, 73,500 பாகிஸ்தான் போர் வீரர்களை நமது ராணுவம் கைது செய்தது. வங்கதேசம் உருவானபிறகு, முஜிபுர் ரஹ்மான் ஆட்சியை ஆரம்பித்தபின், அமெரிக்காவின் அழுத்ததின்பேரில் இந்திராகாந்தி, பீல்டு மார்ஷல் மனேக்க்ஷா அவர்களின் ஆலோசனைகளையும் மறுப்புகளையும் மீறி இந்திராகாந்தி அந்த பாகிஸ்தான் போர் கைதிகளை விடுதலை செய்தார். மனேக்க்ஷா அவர்கள் கூறிய ஆலோசனை என்னவென்றால், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, நாம் காஷ்மீர் ஆக்கிரமிப்பு பகுதியை பாகிஸ்தானிடமிருந்து மீட்கவேண்டும் என்று ஆலோசனை கூறினார். ஆனால் அமெரிக்காவின் வற்புறுத்ததாலும், பயமுறுத்ததாலும், இந்திரா காந்தி அதற்கு ஒப்புக்கொள்ளாமல், 73,500 கைதிகளையும் நிபந்தனையின்றி விடுதலை செய்ய உத்தரவிட்டார். இதுதான் உண்மை. 1971ல் பல ஆங்கிலப் பத்திரிகைகளில் இது போன்ற செய்தி வந்ததுள்ளது. நானும் அவற்றை வாசித்துள்ளேன். எனவே, பழைய சரித்திரம் தெரியாமல் ஏனோதானோ என்று கருத்து கூறக்கூடாது. 0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
02 நவ,2025 - 08:47 Report Abuse
காங்கிரஸ் ஆட்சியில் இன்று இருந்திருந்தால் அந்த சுதந்திரம் கிடைத்திருக்காது. பாகிஸ்தானின் அட்டகாசம் இந்தியாவின் மீது அதிகரித்திருக்கும். மோடி ஆட்சியில் இருப்பதால்தான் பாகிஸ்தான் வாலை சுருட்டிக்கொண்டிருக்கிறது. 0
0
Reply
Ravichandran Rangaswamy - ,இந்தியா
02 நவ,2025 - 08:36 Report Abuse
இங்கே சிலருக்கு வயிறு எரியும் 0
0
Reply
aaruthirumalai - ,
02 நவ,2025 - 08:29 Report Abuse
நல்லது நினைத்தால் நல்லதே நடக்கும். 0
0
Reply
KOVAIKARAN - COIMBATORE,இந்தியா
02 நவ,2025 - 08:21 Report Abuse
அதே சுதந்திரத்துடன், பிரதமர் அனுமதி பெற்று, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை மீட்டு, விரைவில் நமது இந்திய மக்களுக்கு 2026 புது வருட பரிசாக கொடுங்கள். செய்வீர்கள் என்று நம்புகிறோம். வாழ்க, வளர்க அகன்ற பாரதம். 0
0
Reply
மேலும்
-
இன்று மாலை 5.26 மணிக்கு விண்ணில் பாய்கிறது செயற்கைக்கோள்; தினமலர் இணையதளத்தில் லைவ் பாருங்க!
-
மெக்சிகோவில் சோகம்; சூப்பர் மார்க்கெட்டில் தீப்பற்றியதில் 23 பேர் உயிரிழப்பு
-
திமுகவின் கபட நாடகத்தை மக்கள் நம்ப தயாராக இல்லை: விஜய்
-
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்; வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து ஆலோசனை
-
வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: வானிலை மையம் தகவல்
-
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் புதிய அம்சங்கள்; நாளை மறுதினம் துவக்கம்; வீடு தேடி அதிகாரிகள் வருவர்
Advertisement
Advertisement