பீஹார் வரலாற்றில் சிறப்பான சட்டமன்ற தேர்தல்: தலைமை தேர்தல் கமிஷனர்
புதுடில்லி: பீஹார் வரலாற்றில் சிறப்பான சட்டமன்ற தேர்தல் என்று தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் கூறினார்.
பீஹாரில் இரண்டு கட்டங்களாக கடந்த 6,11 ஆகிய தேதிகளில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.
இந்நிலையில் டில்லியில் ஞானேஷ் குமார் கூறியதாவது:
2025 சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) தொடர்பாக பீஹாரின் 38 மாவட்ட நீதிபதிகளில் எவருக்கும் ஒரு மேல்முறையீடு கூட வரவில்லை.
எஸ்ஐஆர் பயிற்சி வெற்றிகரமாக நிறைவடைந்தது.திருத்தச் செயல்பாட்டில் 7.5 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் பங்கேற்றனர்.இந்தச் செயல்பாட்டில் அனைத்து அரசியல் கட்சிகளிலிருந்தும் அடிமட்டத் தேர்தல் பணியாளர்கள் மற்றும் சுமார் 1.76 லட்சம் பூத்-நிலை முகவர்கள் தீவிரமாகப் பங்கேற்றனர்.
இந்த "அயராத மற்றும் வெளிப்படையான முயற்சிகள்" காரணமாக, இறுதி திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் தொடர்பாக எந்த மாவட்ட நீதிபதிகளிடமும் மேல்முறையீடுகள் தாக்கல் செய்யப்படவில்லை.
எஸ்ஐஆரின் பயிற்சியின் அவசியத்தை தேர்தல் கமிஷன் பல சந்தர்ப்பங்களில் பாதுகாத்து, 22 வருட இடைவெளிக்குப் பிறகு தகுதியற்ற பெயர்களை (இறந்த அல்லது நிரந்தரமாக இடம்பெயர்ந்த நபர்களின் பெயர்கள் போன்றவை) நீக்கி, தகுதியான வாக்காளர்களைச் சேர்ப்பதன் மூலம் வாக்காளர் பட்டியல் திருத்தப்பட்டுள்ளது.
இறுதியில் மிகவும் துல்லியமான மற்றும் "தூய்மையான" பட்டியலுக்கு வழிவகுத்தது.
இவ்வாறு ஞானேஷ்குமார் கூறினார்.
இந்தியாவில் தேர்தல் அறமென்று ஒன்று இருந்தது என்ற நிலைமையை உறுவாக்கிய புண்ணியவான்.
ஐயோ, ஐயோ ..அடுத்த கவர்னர் பதவி ரெடி ....
இனிமே தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் எஸ்ஐஆர் இல்லாமல் இருக்கும் தேர்தல் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் , இதை எல்லா தேறுதலுக்கும் முன்பு கண்டிப்பாக அமல் படுத்த வேண்டும்....இதை பார்லிமென்டில் சட்டமாக கொண்டு வரவேண்டும்.
மிகவும் துல்லியமான மற்றும் தூய்மையான பட்டியலுக்கு - after ethnic cleansing?
இவரே மெடல் குத்திக்கிறார். குருவை மிஞ்சிட்டார்.
உன்னை தான் டெல்லியில் தேடுறாங்கமேலும்
-
தீபாவளியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்த சதிக்காரர்கள்; டில்லி குண்டுவெடிப்பு வழக்கு விசாரணையில் திடுக்
-
கனடா அமைச்சர் அனிதா ஆனந்துடன் ஜெய்சங்கர் சந்திப்பு
-
அடுத்த உலக கோப்பை கால்பந்து போட்டி தான் கடைசி: ஓய்வு குறித்து மனம் திறந்தார் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ
-
தங்கம் விலை ரூ.800 குறைவு: ஒரு பவுன் ரூ.92,800க்கு விற்பனை
-
விசில் சின்னம் கோரி விஜயின் தவெக தேர்தல் கமிஷனில் மனு
-
10 மான்களை கடித்துக் கொன்ற தெருநாய்கள்; கேரளாவில் புதிதாக திறக்கப்பட்ட பூங்காவில் சோகம்