ரூ.1.60 கோடி தங்க கட்டிகள் 'ஆட்டை' போட்ட 2 பேர்
ஹலசூரு கேட்: பெங்களூரு, நகரத்பேட்டில் வசிப்பவர் ஹர்ஷித்; நகை கடை வைத்துள்ளார். இவருக்கு, ராஜேந்திர குமார், 54, ஜீவன் சகாரியா, 32, ஆகியோரின் அறிமுகம் கிடைத்தது.
'எங்களுக்கு பெரிய ஜுவல்லரி கடையின் உரிமையாளர்களை தெரியும். உங்கள் கடையில் உள்ள தங்க கட்டிகளை அதிக விலைக்கு விற்றுத் தருகிறோம்' என, ஹர்ஷித்திடம், இருவரும் கூறினர். இதை நம்பிய ஹர்ஷித்தும், கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரை 1 கிலோ 300 கிராம் எடையுள்ள, தங்கக்கட்டிகளை கொடுத்தார்.
இருவரும் தங்கக் கட்டிகளை விற்காமலும், திரும்ப தராமலும் ஏமாற்றினர்.
இருவர் மீது ஹலசூரு கேட் போலீசில் ஹர்ஷித் புகார் செய்தார். இருவரையும் நேற்று முன்தினம் சேஷாத்ரிபுரத்தில் போலீசார் கைது செய்தனர். 1.60 கோடி ரூபாய் மதிப்பிலான, தங்கக் கட்டிகள் மீட்கப்பட்டன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
விருதுநகரை உலுக்கிய கோவில் காவலாளிகள் கொலை வழக்கு: ஒருவர் சுட்டுப்பிடிப்பு
-
மாவட்டத்தில் சைபர் குற்றங்கள்... அதிகரிப்பு; விழிப்புணர்வு ஏற்படுத்த கோரிக்கை
-
ஆசிரியை கொலை வழக்கில் கீழ்நீதிமன்றம் விடுதலை செய்தவருக்கு ஆயுள்தண்டனை: உயர்நீதிமன்றம் உத்தரவு
-
தேர்தலில் தினகரனுக்கு முடிவுரை: உதயகுமார்
-
மதுரையில் போலீஸ் விசாரணையில் மரணம்: சி.பி.சி.ஐ.டி., அறிக்கை தர அவகாசம்: உயர்நீதிமன்றம் உத்தரவு
-
சட்டவிரோதமாக ஆர்.சி., புக் வைத்திருந்த 3 பேர் மீது வழக்கு
Advertisement
Advertisement