6 நாட்கள் சுற்றுப்பயணம்; போட்ஸ்வானா சென்ற ஜனாதிபதி முர்முவுக்கு வரவேற்பு
லுவாண்டா: ஆப்ரிக்க நாடான போட்ஸ்வானா சென்ற ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆப்ரிக்க நாடுகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு 6 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார். அவர் அங்கோலோ மற்றும் போட்ஸ்வானாவிற்கு செல்லும் முதல் இந்திய ஜனாதிபதி ஆவார். அங்கோலா தலைநகர் லுவாண்டாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு சென்று அடைந்தார்.
அவருக்கு விமான நிலையத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கோலாவின் ஜனாதிபதியை சந்தித்து இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து திரவுபதி முர்மு ஆலோசனை நடத்தினார். அங்கோலா பார்லிமென்டில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார்.
அங்கோலா பயணத்தை முடித்துக்கொண்டு போட்ஸ்வானா சென்றார். அந்நாட்டின் தலைநகர் கபொரின் சென்ற திரவுபதி முர்முவை அந்நாட்டு அதிபர் டுமா கிடியோன் போகோ வரவேற்றார். இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசித்தனர்.
இந்திய ஜனாதிபதி போட்ஸ்வானாவிற்கு சென்றது இதுவே முதல் முறை. போட்ஸ்வானா பார்லிமென்டில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்ற உள்ளார். அவர், நவ., 13ம் தேதி இந்தியா திரும்புகிறார்.
மேலும்
-
தீபாவளியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்த சதிக்காரர்கள்; டில்லி குண்டுவெடிப்பு வழக்கு விசாரணையில் திடுக்
-
கனடா அமைச்சர் அனிதா ஆனந்துடன் ஜெய்சங்கர் சந்திப்பு
-
அடுத்த உலக கோப்பை கால்பந்து போட்டி தான் கடைசி: ஓய்வு குறித்து மனம் திறந்தார் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ
-
தங்கம் விலை ரூ.800 குறைவு: ஒரு பவுன் ரூ.92,800க்கு விற்பனை
-
விசில் சின்னம் கோரி விஜயின் தவெக தேர்தல் கமிஷனில் மனு
-
10 மான்களை கடித்துக் கொன்ற தெருநாய்கள்; கேரளாவில் புதிதாக திறக்கப்பட்ட பூங்காவில் சோகம்