கனடா அமைச்சர் அனிதா ஆனந்துடன் ஜெய்சங்கர் சந்திப்பு
ஒண்டாரியா: அரசு முறைப் பயணமாக கனடா சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்தை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, டில்லியில் நடந்த கார் வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்திற்கு அனிதா ஆனந்த் கவலை தெரிவித்தார்.
ஜி7 நாடுகளான கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி,ஜப்பான், அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு, கனடாவின் ஒண்டாரியாவில் உள்ள நயாகரா பகுதியில் நடைபெற்றது. இதில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார்.
இந்த மாநாட்டின் போது வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்தை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சந்தித்து பேசினார். அப்போது, டில்லியில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்திற்கு அனிதா ஆனந்த் கவலை தெரிவித்தார். மேலும், இந்த துயரமான நேரத்தில் இந்திய மக்களுடன் கனடா துணை நிற்பதாகவும் கூறினார்.
தொடர்ந்து, இரு நாடுகளிடையே எரிசக்தி, வர்த்தகம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. குறிப்பாக, இந்தியா - கனடா இடையேயான சட்ட அமலாக்க ஒத்துழைப்பு தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.
போன மாசமே இங்கே சந்திச்சு பேசுனாங்களே... முழுசா பேசலியா?மேலும்
-
தீபாவளியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்த சதிக்காரர்கள்; டில்லி குண்டுவெடிப்பு வழக்கு விசாரணையில் திடுக்
-
அடுத்த உலக கோப்பை கால்பந்து போட்டி தான் கடைசி: ஓய்வு குறித்து மனம் திறந்தார் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ
-
தங்கம் விலை ரூ.800 குறைவு: ஒரு பவுன் ரூ.92,800க்கு விற்பனை
-
விசில் சின்னம் கோரி விஜயின் தவெக தேர்தல் கமிஷனில் மனு
-
10 மான்களை கடித்துக் கொன்ற தெருநாய்கள்; கேரளாவில் புதிதாக திறக்கப்பட்ட பூங்காவில் சோகம்
-
6 நாட்கள் சுற்றுப்பயணம்; போட்ஸ்வானா சென்ற ஜனாதிபதி முர்முவுக்கு வரவேற்பு