ஆட்சியை வீழ்த்த முடியாது என்று அதிகார மயக்க முழக்கம்; முதல்வர் குறித்து விஜய் விமர்சனம்
சென்னை: தவெகவின் விமர்சனங்களை தாங்கிக் கொள்ள முடியாமல், 'எந்தக் கொம்பனாலும் எங்களை, எங்கள் ஆட்சியை வீழ்த்த முடியாது' என்கிற அதிகார மயக்க முழக்கம் விட்டதாக திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலினை தவெக தலைவர் விஜய் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை; சமீப காலமாக, ஆட்சி அதிகாரத்தில் இருந்து அதிவிரைவில் மக்களால் தூக்கி எறியப்படப் போகும் அதிகார மமதை கொண்ட கட்சி ஒன்று, அவசர கதியில் தனக்குப் பழக்கமான அவதூறு அரசியல் ஆட்டத்தைத் தொடங்கி உள்ளது. எந்தக் கட்சியைச் சொல்கிறோம் என்று தெரிகிறதா? அவதூறு ஒன்றையே அடிப்படை அரசியல் கோட்பாடாகக் கொண்ட கட்சி வேறு எந்தக் கட்சியாக இருக்கும் என்று சொல்லித்தான் தெரிய வேண்டுமா?
இப்போதெல்லாம் அந்தக் கட்சியின் ஒரே இலக்கு, நம்மைத் தூற்றுவதே. தமிழக வெற்றிக் கழகத்தை மட்டும் மூளையில் தேக்கி யோசிப்பதே அதன் முழுநேர வேலை என்றாகிவிட்டது. அவர்களுக்கு, 1969க்குப் பிறகு, அவதூறுதான் அரசியல் கொள்கை. லஞ்ச லாவண்யம், ஊழல்தான் லட்சியக் கோட்பாடு. இந்நிலையில், மக்களுடன் மக்களாக இதயப்பூர்வமாக இரண்டறக் கலந்த பிறகே மாபெரும் மக்கள் சக்தியுடன் அரசியலுக்கு வருகிற நம் போன்ற ஓர் இயக்கத்தைக் கண்டால், அவர்களின் மூளை மழுங்கி முனகத்தானே செய்யும்?
நாம், அவர்கள் மீது வைக்கின்ற மிக லேசான விமர்சனங்களுக்கே மக்கள் மிக பலமான வரவேற்பை அளிக்கத் தொடங்கி உள்ளனர். அதைக் கண்டு அஞ்சி நடுங்கியதால்தான், தங்கள் எண்பேராயம் மற்றும் ஐம்பெருங்குழுக்களைக் கொண்டு அதிரி புதிரியாக ஆலோசித்தும் நம் மீது மக்கள் ஏற்றுக்கொள்ளும் எந்த ஒரு விமர்சனத்தையும் வைக்கவே இயலவில்லை. அத்தகைய இயலாமையில், அந்தக் கட்சியின் தலைவர் கைக்கொண்டதுதான் 'எந்தக் கொம்பனாலும் எங்களை, எங்கள் ஆட்சியை வீழ்த்த முடியாது' என்கிற அதிகார மயக்க முழக்கம்.
தங்களைக் கொள்கைவாதிகளாக அடிக்கடி காட்டிக்கொள்வதற்காக, எல்லோரையும் ஏமாற்றுவதற்காக, தமிழ்நாடு, தமிழ் மொழி, தமிழினம்தான் தங்கள் உயிர் என்றும் மண், மொழி, மானம்தான் தங்கள் தலையாய கொள்கை என்று ஒரு சம்பிரதாயச் சங்கை முழங்கத் தொடங்கி உள்ளார், அக்கட்சியின் தலைவர். போதாதென்று, அறிவுத் திருவிழா என்ற பெயரில் பரண்களில் கிடக்கும் பழைய ஓலைகளைத் தூசு தட்டித் தோரணம் கட்டப் பார்க்கும் அவர்களின் பழைய மற்றும் புதிய கொள்கை உறுதி பற்றிக் கொஞ்சமே கொஞ்சம் பார்க்கலாமா?
யாரை ஏளனமாகப் பரிகாசம் செய்தார்களோ அவர்களிடமே பதவிக்காகப் பம்மினரே, அப்போது எங்கே போயிற்று மானம்?
ஆட்சியில் இல்லாதபோது 'தமிழ் தமிழ்' என்பதும், 'தமிழர் தமிழர்' என்பதும், ஆட்சிக்கு வந்ததும் அதிகாரப் பதவிகளுக்குள் அடக்கமாக அமர்ந்துகொண்டு, அரசியல் சாசனக் கட்டுப்பாடுகள் மீது பழி போட்டுப் பதவி சுகம் காணும்போது எங்கே போனது மண், மானம் மற்றும் மொழி மீதான கொள்கைப் பாசம்? அறிவுத் திருவிழா என்று பெயர் வைத்துவிட்டு, முழுக்க முழுக்க, தமிழக வெற்றிக் கழகத்தை மட்டுமே மறைமுகமாகத் திட்டும் திருவிழாவாக அதை மாற்றியதிலேயே அது அறிவுத் திருவிழாவாக இல்லாமல் அவதூறுத் திருவிழாவாகத்தானே மாறியது?
53 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும், ஆட்சி அதிகாரத்தைப் பகல் கனவாக்கப் போகும் ஒரு 'பக்கா மாஸ்' கட்சி வந்திருப்பதைக் கண்டு நாள்தோறும் உளறும் அவர்களுக்கு நாம் சொல்வதெல்லாம் என்ன தெரியுமா?
பவளவிழா பாப்பா - நீ
பாசாங்கு காட்டல் ஆகாது பாப்பா
நீ நல்லவர்போல நடிப்பதைப் பார்த்து
நாடே சிரிக்கிறது பாப்பா.
நேற்று நடந்த சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில்கூட யாரை விமர்சிக்க வேண்டுமோ அவர்களை விமர்சிப்பதைவிட, நம்மைத் திட்டவைத்து அகமகிழ்ந்ததே நடந்தது. எல்லா வகையிலும் கபட நாடகம் ஆடும் அவர்களது அவல ஆட்சியின் லட்சணங்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம். மேலும், மக்கள் சக்தியின் மதிப்பை, வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்களுடன் மக்களாக இணைந்து நின்று, இந்த அவதூறு மன்னர்கள் உணரச் செய்வோம், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வாசகர் கருத்து (10)
BHARATH - TRICHY,இந்தியா
12 நவ,2025 - 23:26 Report Abuse
பீ டீம் டாக் 0
0
Reply
T.sthivinayagam - agartala,இந்தியா
12 நவ,2025 - 21:16 Report Abuse
தமிழக வயிற்று எரிச்சல் கட்சி தலைவருக்கு முதல்வர் ஆசை அதிகமாகவே உள்ளது. காலம் தான் பதில் சொல்ல முடியும் என்று மக்கள் கூறுகின்றனர். 0
0
Reply
Matt P - nashville,tn,இந்தியா
12 நவ,2025 - 21:16 Report Abuse
அவரு தான் அப்படி சொல்லிட்டாரு கண்டும் காணாமல் விட வேண்டியது தானே. அரசியலில் நடிகர் விஜயை குறித்து பேசுவதற்கு கட்டாயமாக்கப்பட்டிருப்பதிலிருந்தே தெரிகிறது, உங்கள் நடுக்கம். அதிகார மயக்கத்தில் முழக்கமிடுபவர்கள் ஆளும் கட்சிக்காரர்களாக தான் இருக்க முடியும். அதிகாரம் உங்கள் கையில் தானே இருக்கிறது. விஜய் குறித்து நீங்கள் பேசும்போது அது நாளிதழ்களில் வரும். அதுவே அவர் கட்சியை மேலும் வளர்ப்பதற்கு உதவலாம். குடி உயர நாடு உயரும். திமுகவின் பல்லாண்டு கால ஆட்சியினால் நாடு உயரவில்லை. ஓவ்வொரு குடும்பத்தின் உழைப்பினாலும் படிப்பினாலும் தான் நாடு உயர்கிறது. அரசியயலில் வூழ் கொலை கொள்ளை தவிர்க்க முடியாது என்ற நிலைக்கு உங்களை போன்றவர்களால் ஏற்பட்டுவிட்டதே...இன்னொரு கட்சியின் கீழ் ஆட்சி போனால் தொடக்கத்தில் வூழ்ல் இருக்காது என்று நம்பலாம். திமுக ஆட்சிக்கு வந்த முதல் நாளே திருட்டு வூழ் ஆரம்பித்து விடும். பழக்கத்தால் வூழ்ல் திறமையை வளர்த்து கொண்டு விட்டதால். மக்களாட்சி பலதரப்பட்ட மக்களின் கீழ் அமையும் அமைப்பு என்பதால் வூழ்ல் நாள் போக போக கீழ்த்தரமான மக்களால் நடந்து கொண்டு தான் இருக்கும். தன்மானம் உள்ளவர்கள் தமிழர்கள் என்றால் புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள். அரசியலில் வேதனையை அனுபவித்து தான் ஆக வேண்டும் கரூர் சம்பவமும் சான்று.அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். எழுத்தாளன் முதலாளி தொழிலாளி ..வருவதற்கு முன்நே மக்கள் அறிமுகம் பெற்று இருக்க வேண்டும் என்பதால் அது நடிகனால் மட்டுமே முடிகிறது. 0
0
Reply
kjpkh - ,இந்தியா
12 நவ,2025 - 18:43 Report Abuse
போங்கப்பா.விஜய் பேச்சு சரியாக இல்லை.விஜய் தனியாக களம் கண்டால் அது திமுகவுக்கு மிகவும் சாதகமாக அமையும். விஜய் இதை தெரிந்து செய்கிறாரா இல்லை தெரியாமல் செய்கிறாரா என்பது புரியவில்லை. அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் மட்டுமே திமுக ஆட்சியில் இருந்து இறக்க முடியும். கூட்டணி இல்லாமல் திமுகவே தனியாக நிற்க பயப்படுகிறது. விஜய் தனியாக நின்று எதையும் சாதிக்க முடியாது. 0
0
Reply
Govi - ,
12 நவ,2025 - 16:56 Report Abuse
அகற்றபட வேண்டியதுதான்
உன்னால
முடியாது .மமதை உண்கண்ண மறைக்குடு
நீ காணம போவாய் 0
0
Reply
Ms Mahadevan Mahadevan - கோவில்பட்டி,இந்தியா
12 நவ,2025 - 15:41 Report Abuse
உண்மையில் மக்கள் மீது அக்கறை இருந்தால் பிற கட்சிகள் சொல்லுவதையே கொள்கை என்று சொல்லாமல், நல்ல கொள்கை யான மதுவிலக்கு, ஜாதி மத சார் சலுகை இல்லாத கொள்க என்று சொல்லி பிற விட தான் நாட்டுக்கு நல்லது செய்ய அரசியலுக்கு வந்துள்ளேன் என்று சொல்லி தனித்து போட்டி இட்டு கட்ட தன பலத்தை. 0
0
Reply
jaya - Jakarta,இந்தியா
12 நவ,2025 - 14:32 Report Abuse
அதிமுகவால் திமுகவை தோற்கடிக்க முடியாது என்று நினைக்கிறேன். மேலும், அனைத்து அதிமுகவினரும் ஊழல் இல்லாதவர்கள் அல்ல. எனவே, விஜய், அண்ணாமலை போன்ற சில நல்ல இளைஞர்கள், தங்கள் கட்சி அரசியலை விட்டுவிட்டு ஒன்றிணைந்து திமுகவை தோற்கடித்து, ஊழலற்ற அரசாங்கத்தை வழங்க வேண்டும். 0
0
Kadaparai Mani - chennai,இந்தியா
12 நவ,2025 - 16:44Report Abuse
AIADMK is the only force can defeat dmk. Annamalai assets you can check with sauvukku media. Annamalai is part of BJP. Vijay says he is dead against BJP. If you are bjp member it is indiscipline . Vijyay is youth and you can check his age. AIADMK bjp alliance will sweep polls . Appropriate alliance partners EPS sir and Hon shah sir will decide. 0
0
Reply
Kulandai kannan - ,
12 நவ,2025 - 14:23 Report Abuse
ஊப்பீஸை வெறுப்பேற்றுகிறார். 0
0
Reply
Santhakumar Srinivasalu - ,
12 நவ,2025 - 14:00 Report Abuse
நேத்தைக்கு வந்து கருர் இறப்பு சம்பவத்திற்கு காரணமானவனுக்கு எல்லாம் தமிழ் நாட்டு அரசியலை பற்றி என்ன தெரியும்? 0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement