யுபிஎஸ்சி மெயின் தேர்வில் சாதித்த தமிழக மாணவர்கள் 155 பேர்!
சென்னை: 2025ம் ஆண்டு யுபிஎஸ்சி மெயின் தேர்வில் தமிழகத்தை சேர்ந்த 155 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.
2025ஆம் ஆண்டுக்கான மத்திய அரசுப் பணியாளர் தேர்வின் முதன்மைத் தேர்வு முடிவுகளை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. தேர்வை எழுதிய தேர்வர்கள், https://upsc.gov.in/ என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம். தமிழகத்தை சேர்ந்த 155 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். கடந்தாண்டை விட தேர்ச்சி வீதம் 13.97% அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு 136 மாணவர்கள் தேர்ச்சி பெற்று இருந்த நிலையில் இந்தாண்டு 155 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். முதன்மைத் தேர்வைப் பொறுத்தவரை 2736 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் தமிழக அரசின் பயிற்சி மையத்தில் பயின்ற 85 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
வாசகர் கருத்து (1)
sivakumar Thappali Krishnamoorthy - Dubai,இந்தியா
12 நவ,2025 - 18:03 Report Abuse
வாழ்த்துக்கள் ... 0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement