வில்வித்தை: பைனலில் இந்தியா
தாகா: வங்கதேசத்தின் தாகாவில் ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் நடக்கிறது. காம்பவுண்டு கலப்பு அணிகளுக்கான போட்டி நடந்தது. இந்தியாவின் அபிஷேக், தீப்ஷிஹா இடம் பெற்ற அணி, காலிறுதியில் 159-155 என வியட்நாமை வென்றது. அடுத்து நடந்த அரையிறுதியில் இந்தியா, கஜகஸ்தான் அணிகள் மோதின.
இதில் இந்திய அணி 156-153 என்ற கணக்கில் வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது. இதில் இன்று வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.
'ரீகர்வ்' கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் அன்ஷிகா குமாரி, யாஷ்தீப் சஞ்சய் ஜோடி, 0-6 என சீன தைபே ஜோடியிடம் தோல்வியடைந்தது. வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் நாளை தென் கொரியாவை சந்திக்க உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மூதாட்டிகளிடம் செயின் பறிப்பு ;பஸ்சில் பயணிப்போர் பத்திரம்
-
மெட்ரோவில் 'சோலார் பேனல்'கள்
-
செம்மொழி பூங்கா அனைவரையும் கவரும்; டிச., இறுதிக்குள் முடிக்க மாநகராட்சி திட்டம்
-
துறைமுக ஊழியர்கள் டிச., 1 முதல் 'ஸ்டிரைக்'
-
சிட்கோ நகரில் சமூக கூடம் டிசம்பரில் திறப்பு
-
'ரூ.10 லட்சத்துக்கு மேல் பணம் எடுத்தால் தெரிவிக்க வேண்டும்'
Advertisement
Advertisement