நாய் கடித்து ரேபிஸ் பாதித்த வாலிபர் பலி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் சிதம்பரபுரத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ஐயப்பன் 30. மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். சில நாட்களுக்கு முன் தெருநாய் கடித்தது. அவர் சிகிச்சையும் மேற்கொள்ளவில்லை.

உடல்நிலை மோசமடைந்ததால் கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அவருக்கு ரேபிஸ் நோய் ஏற்பட்டிருப்பதை கண்டறிந்தனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், நேற்று உயிரிழந்தார்.

Advertisement