ரூ.2 லட்சம் பீடி இலைகள் பறிமுதல்
ராமேஸ்வரம்: கொழும்பு நீர்கொழும்பு மற்றும் சிலாபம் கடற்கரையில் இலங்கை கடற்படை வீரர்கள் ரோந்து சென்ற போது அங்கு நிறுத்தி இருந்த 3 பைபர் கிளாஸ் படகுகளை சோதனையிட்டனர். இதில் 22 மூடைகளில் 742 கிலோ பீடி இலைகள் இருந்தது. பீடி இலைகளையும், 3 படகுகளையும் பறிமுதல் செய்து படகு உரிமையாளர்கள் 3 பேரை கைது செய்து நீர்கொழும்பு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
பீடி இலைகளின் மதிப்பு ரூ.2 லட்சம். இவற்றை துாத்துக்குடி கடலோரப் பகுதியில் இருந்து நாட்டுப்படகில் கடத்தி வந்திருக்கலாம் என தெரிகிறது. இதில் தொடர்புடைய துாத்துக்குடி கடத்தல்காரர்கள் யார் என மத்திய, மாநில உளவுப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அரசு சொகுசு பஸ் பயணியருக்கு இலவச 'நந்தினி' ஸ்வீட்ஸ் தொகுப்பு
-
காயமடைந்தோரை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல்
-
காதலை கண்டித்தார் தந்தை மிரட்டல் விடுத்தார் மகள்
-
பயணிகளை இன்முகத்துடன் வரவேற்கும் கண்டக்டர்
-
தேனியில் டிராக்டர் மீது டூவீலர் மோதல் இருவர் பலி
-
நாய் கடித்து ரேபிஸ் பாதித்த வாலிபர் பலி
Advertisement
Advertisement