முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளிலும் தேஜ கூட்டணி ஆதிக்கம்
பாட்னா: பீஹார் தேர்தலில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் தேஜ கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலை பெற்றுள்ளனர். எதிர்க்கட்சி கூட்டணிக்கு பலத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
ஓட்டு எண்ணிக்கை
243 தொகுதிகள் கொண்ட பீஹார் சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக நவ., 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் தேர்தல் நடந்தது. கடந்த காலத்தை விட இம்முறை அதிக ஓட்டு சதவீதம் பதிவானது. அதிலும், ஆண்களை விட அதிக பெண் வாக்காளர்களே தங்களது ஓட்டுக்களை பதிவு செய்திருந்தனர். ஓட்டு எண்ணிக்கை இன்று நடந்து வருகிறது.
அதிக முஸ்லிம்கள்
மதுபானி, பிஸ்பி, ஷியோஹர், ஹர்லகி, பேனிப்பட்டி, கஜவுலி, பாபுபர்ஹி, கியோட்டி, நர்பட்கஞ்ச், ஜலே, அராரியா, ஜோகிஹாட், சிக்டி, பகதூர்கஞ்ச், தாக்கூர் கஞ்ச்,கிஷன் கஞ்ச், கோச்சத்தமன், ராணிகஞ்ச்,போர்ப்ஸ்கஞ்ச், கதிஹார், கட்வா, பல்ராம்பூர், பிரான்பூர், மணிஹரி, பராரி, காஸ்பா, பன்மன்ஹி, ரூபாலி, தம்தாஹா, பூர்னியா, அமவுர், பைசி ஆகிய 32 தொகுதிகள் முஸ்லிம்கள் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள். இங்கு முஸ்லிம்கள் வழக்கமாக ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் ஓட்டு வங்கியாக இருந்தனர். இதனால் அக்கட்சி வேட்பாளர்களே இங்கு அதிக இடங்களில் வெற்றி பெற்று வந்தனர்.
ஆளுங்கட்சி நிலவரம்
ஆனால், இன்று நடந்த ஓட்டு எண்ணிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் குறைந்தது 16 தொகுதிகளில் தேஜ கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலை பெற்றுள்ளனர்.
அதிலும், ஐஜத கட்சி வேட்பாளர்கள், இந்தத் தொகுதிகளில் கடந்த தேர்தலை விட இம்முறை கூடுதலாக 8 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.
சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி( ராம்விலாஸ்) கட்சி முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் 6 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகின்றனர்.
எதிர்க்கட்சி நிலவரம்
மறுபுறம், மகாகத்பந்தன் கூட்டணி ஓட்டு வங்கியில் சரிவு ஏற்பட்டுள்ளது. முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் 2020 தேர்தலில் 18 இடங்களை பெற்றிருந்த ஆர்ஜேடி கட்சி, இம்முறை 11ல் மட்டுமே முன்னிலையில் உள்ளது. 6 தொகுதிகளில் வென்றிருந்த காங்கிரஸ் கட்சி 2 ல் மட்டுமே முன்னிலையில் உள்ளது.
2022ம் ஆண்டு நடந்த சர்வேயில் பீஹார் மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 17.7 சதவீதம் பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மதம் சார்ந்து அனைத்து இஸ்லாமியர்களும் இதைக்கவனிக்க வேண்டும் ...... பலர் தேசியத்துடன் ஒத்துப்போக விரும்புகிறார்கள் ......
வி வெல்கம் தி ரிசல்ட். . ஹோப் சமே ரிசல்ட் இந்த முறை சென்னை இல் வேண்டும்
எல்லா இஸ்லாமியர்களும் இந்தியராக வோட்டு போட வேண்டும் முஸ்லிமாக அல்ல. உங்கள் வாழ்க்கை மற்றும் வாழ்வதாரத்தை மேல கொண்டு செல்வோருக்கு வோட்டு போடவேண்டும். உங்கள் ஓட்டுக்காக ஏமாற்றுபவர்களை முற்றிலுமாக ஒதுக்க வேண்டும்.
படித்தவர்கள் நிறைய பேர் இங்கு வாக்களிக்கின்றனர். முன்புமாதிரி மக்களை பொய்சொல்லி ஏமாற்றமுடியாது. ஜாதிரீதியாகவும் மதரீதியாகவும் மக்களை பிளவுபடுத்துவது திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தான். தேசிய நீரோட்டத்தில் தமிழக மக்களை சேரவிடாமல் , தனித்தமிழகம் என்று பேசி நல்ல நல்ல திட்டங்களை தமிழ்நாட்டுக்கு வரவிடாமல் செய்து, சிறுபான்மையினருக்கு பாஜக எதிரி, முஸ்லிம்களுக்கும் கிருத்துவர்களுக்கும் நாங்கள்தான் பாதுகாப்பு என்ற ஒரு பொய்யான பிம்பத்தை நெடுங்காலமாக கட்டமைத்து பித்தலாட்ட அரசியல் செய்துவரும் திமுக வுக்கு அந்த சிறுபான்மையினரே வரும் சட்டமன்ற தேர்தலில் தக்க பதிலடி தருவார்கள்.
Heartfelt thanks to my Muslim brothers and sisters in Bihar. You ll be safe and more comfor under the care of Shri. Narendra Modi Ji
பீகாரிலுள்ள முஸ்லிம்கள் போலவே, தமிழகத்தில் வாழும் முஸ்லிம்களும் நாட்டின் பாதுகாப்பையும், நாட்டின் இறையாண்மையையும் மனதில் கொண்டு பாஜக கூட்டணிக்கு எதிர்காலத்தில் ஓட்டுப் போட்டால் அவர்களுக்கும் நல்லது.
காங்கிரஸ் கூடாரம் மொத்தமாக காலி, பீஹார் மக்களுக்கு எனது வாழ்த்துக்களும், பாராட்டுகளும் உரித்தாகட்டும் நன்றிகள் பல. அடுத்து மேற்கு வங்காளம்.
பீகார் வாக்காளர்கள் இன்று முதல் என் மனதின் பெரும் மதிப்புள்ளவர்களாக தெரிகின்றனர் கடவுள் இருக்கிறார்