கூட்டணியில் நாங்கள் முதன்மையானவர்கள் கிடையாது: ஆர்ஜேடி மீது பழி போடும் காங்.
புதுடில்லி: கூட்டணியில் நாங்கள் முதன்மையானவர்கள் கிடையாது என்று பீஹார் தேர்தல் தோல்வி குறித்து காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் கருத்து கூறி உள்ளார்.
பீஹார் சட்டசபை தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வரலாற்று வெற்றியை பெற்றிருக்கிறது. நம்பிக்கை அளித்து ஓட்டு போட்ட வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி, நிதிஷ்குமார் உள்ளிட்ட அனைவரும் நன்றி தெரிவித்துள்ளனர்.
இந் நிலையில், பீஹார் தோல்விக்கு யார் காரணம் என்ற பேச்சுகளும் இண்டி கூட்டணியில் எழ ஆரம்பித்துள்ளன. இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி., சசிதரூர் கூறி உள்ளதாவது;
தோல்விக்கு என்ன காரணம் என்பதை கட்சித் தலைமை ஆய்வு செய்ய வேண்டும். எங்கள் கூட்டணியின் முதன்மையான கட்சி ராஷ்டிரிய ஜனதா தளம் தான். நாங்கள் இல்லை. எனவே ஆர்ஜேடியும் தனது செயல்பாடுகளை கவனமாக ஆராய வேண்டும்.
தோல்விக்கு காரணம் என்ன என்பதை ஆராய கட்சிக்கு முழுமையான பொறுப்பு இருக்கிறது. இருப்பினும் கூட்டணியில் நாங்கள் முதன்மையானவர்கள் அல்ல. தேர்தல் பிரசாரத்தின் போது என்னை கட்சி அழைக்கவே இல்லை. எனவே தனிப்பட்ட முறையில் என்னால வேறு எதுவும் கூறமுடியாது.
தேர்தலுக்கு முன்பாக இது போன்ற வெகுமதிகள் (மகளிருக்கு ரூ.10,000 தந்தது)வழங்கும் போக்குகள் உள்ளன. எது, எப்படி இருந்தாலும் முடிவுகளை விரிவாக பகுப்பாய்வு செய்வோம்.
இவ்வாறு சசிதரூர் கூறினார்.
மேலும்
-
முதல்வர் படைப்பகம் ஸ்டாலின் திறப்பு
-
சிறையில் இருந்து வந்தவுடன் கைவரிசை 'சிசிடிவி'யில் சிக்கிய 'பலே' பைக் திருடன்
-
புதியதாக 270 மின்சார பேருந்துகள் ஜனவரிக்குள் பயன்பாட்டிற்கு வரும்
-
மெட்ரோ ரயிலில் எடுத்து வரப்பட்ட நுரையீரல்
-
வடபழனி முருகன் கோவிலில் ஓதுவார் பயிற்சி பள்ளி துவக்கம்
-
தலை இல்லா முண்டமாக காவல் துறை: அ.தி.மு.க., 'மாஜி' காட்டம்