புதியதாக 270 மின்சார பேருந்துகள் ஜனவரிக்குள் பயன்பாட்டிற்கு வரும்
சென்னை: 'வரும் ஜனவரிக்குள் புதியதாக, 270 மின்சார பேருந்துகள் பயன்பாட் டிற்கு கொண்டு வரப்படும்' என, சென்னை மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, சென்னை மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:
உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கிகள் உதவியுடன், சென்னையில் பல்வேறு கட்டங்களாக, 697 கோடி ரூபாயில், 625 மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதுவரை, 255 மின்சார பேருந்துகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.
அடுத்தகட்டமாக, பூந்தமல்லி, பல்லவன் இல்ல பணிமனைகளில் இருந்து, 270 மின்சார பேருந்துகள் இயக்கப்படும். பூந்தமல்லியில் இருந்து, 125 பேருந்துகள் இம்மாத இறுதிக்குள்ளும், பல்லவன் இல்லத்தில் இருந்து, 145 பேருந்துகள், ஜனவரிக்குள்ளும் இயக்கப்படும்.
இந்த பேருந்துகள் பயன்பாட்டிற்கு வரும்போது, பயணியர் கூடுதல் பஸ் வசதி பெற முடியும்; எரிபொருள் செலவும், 30 சதவீதம் குறையும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் 5.62 கோடி பேருக்கு வினியோகம்
-
புராணகிலாவிற்கு விஜயம் செய்த ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமி
-
வெளிமாநில ஆம்னி பஸ்கள் நிறுத்தம் ரூ.20 கோடி இழப்பு
-
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
-
சேலத்தில் மகளிர் பளு துாக்கும் போட்டி நாமக்கல் டிரினிடி கலை கல்லுாரி சாம்பியன்
-
விவசாயிகளின் தோழனாக விளங்கும் 'டபே' டிராக்டர்