ஜெயிலர் மீது தாக்குதல் கைதி மீது புகார்

திருநெல்வேலி: திருநெல்வேலி மத்திய சிறையில் ஜெயிலர் முனியாண்டியை கைதி ஒருவர் தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

திருச்சியைச் சேர்ந்த ஆயுள் தண்டனை கைதி பொன்னுமணி, நேற்று ஜெயிலர் முனியாண்டியை தாக்கியதுடன், அவரை பணியாற்ற விடாமல் தடுத்துள்ளார். இது குறித்து ஜெயிலர் முனியாண்டி புகாரின் பேரில் பெருமாள்புரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement