ஊடக விவாதங்களில் பங்கேற்க தவெகவினருக்கு கட்டுப்பாடு

சென்னை: தலைமையின் அனுமதியின்றி நிர்வாகிகள் யாரும் ஊடக விவாதங்களில் பங்கேற்கக்கூடாது என தவெக அறிவித்துள்ளது.


இது குறித்து அக்கட்சிவெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தலைமைக் கழகத்தின் அனுமதியினறி கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், யாரும் எவ்வித ஊடக விவாதங்களில் பங்கேற்கக்கூடாது.


பொது வெளியில் நடத்தப்படும் டிவி நிகழ்ச்சிகள், விவாதங்கள், நேரடி பேட்டிகள் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு நேர்காணல் வழங்குவது .ள்ளிட்டவை குறித்து முன் அனுமதி பெற வேண்டும்.

முன் அனுமதி பெறாமல் எந்தவிதமான மாநில அல்லது தேசிய ஊடகங்களில் விவாதங்களில் பங்கேற்கவோ கூடாது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement