அதிமுக சந்தர்ப்ப கூட்டணி; காங்., தாக்கு
சென்னை: தமிழக காங்கிரஸ் எஸ்.சி. துறை தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் அறிக்கை:
ஈரான் போரால் சமையல் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. மக்கள் இன்னலுக்கு ஆளாகாமல் தடுக்க தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
தகுதியுள்ள 1.31 கோடி குடும்பத் தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை , அரசுப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லாமல் பயணம் , மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் ரூ. 1,000 வழங்கப்படுகிறது. புதிய தொழில் தொடங்கும் பெண்களுக்கு 25 சதவீதம் மானியம் (ரூ.75 லட்சம் வரை) மற்றும் 3 சதவீதம் வட்டிச் சலுகையும் வழங்கப்படுகிறது.
பழனிச்சாமியை துரோகி என விமர்சித்த தினகரன், கடுமையாக விமர்சித்த அன்புமணி ஆகியோருடன் சேர்ந்து எந்த அடிப்படையில் பழனிசாமி கூட்டணி வைத்திருக்கிறார்?
அதிமுக தலைமையிலான சந்தர்ப்பவாத கூட்டணியை புறக்கணிக்க தமிழக மக்கள் தயாராகி விட்டனர்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும்
-
தினந்தோறும் பாலியல் குற்ற சம்பவங்கள்; தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம்
-
தமிழகத்தில் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை குறைவு: உள்துறை செயலர், டிஜிபி பேட்டி
-
அமெரிக்கா, இஸ்ரேல் உடனான போர் முடிவுக்கு வர வேண்டுமா: 3 நிபந்தனை விதிக்கிறது ஈரான்
-
40 நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி: பற்றாக்குறை இல்லை என மத்திய அரசு உறுதி
-
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க வேறு நாட்டிடம் ஏன் அனுமதி வாங்க வேண்டும்: ராகுல் கேள்வி
-
மோனலிசாவிற்கு கல்யாணம்.