ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க வேறு நாட்டிடம் ஏன் அனுமதி வாங்க வேண்டும்: ராகுல் கேள்வி
புதுடில்லி: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கும், மற்ற நாடுகளுடன் உறவை பேணுவது என்பதையும் வேறு நாட்டின் அதிபரை முடிவு செய்ய ஏன் அனுமதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி ராகுல் கேள்வி எழுப்பி உள்ளார்.
ஈரான் மீதான தாக்குதல் குறித்த விவாதத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் பேசியதாவது: மத்திய கிழக்கு நாடுகளில் போர் துவங்கி உள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகள் சண்டையிட்டு வருகின்றன. இந்த போர் மோசமான விளைவுகளை ஏற்படுத்தப்போகிறது. 20 சதவீத கச்சா எண்ணெய் போக்குவரத்து நடக்கும் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளது. இது பெரிய அளவில், குறிப்பாக நமக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இந்த ஜலசந்தி வழியாக நமக்கு அதிகளவு கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வருகிறது. இதனால் நமக்கு பெரிய பாதிப்பு ஏற்படும். அதன் தாக்கங்கள் தெரிய துவங்கி உள்ளன. உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. எல்பிஜி குறித்து பெரியளவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இது துவக்கம் தான்.
ஒவ்வொரு நாட்டிற்கும் அடித்தளமாக எரிசக்தி பாதுகாப்பு உள்ளது. யாரிடம் இருந்து கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு வாங்க வேண்டும். ரஷ்யாவிடம் வாங்கலாமா அல்லது வேண்டாமா என அமெரிக்காவை முடிவு செய்ய அனுமதித்து உள்ளோம். எண்ணெய் சப்ளை செய்யும் பல்வேறு நாடுகளுடனான உறவை நாம் முடிவு செய்கிறோம். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கும், யாருடன் உறவை பேண வேண்டும் என வேறொரு நாடு, வேறொரு நாட்டின் அதிபர் முடிவு செய்வதற்கு இந்தியா போன்ற பெரிய நாடு ஏன் அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
வேண்டாம். உங்களிடம் அனுமதி வாங்கினால் போதுமா? உங்கள் அனுமதி அமெரிக்க அனுமதியை விட பெரியது என்பது இந்திய பிரதமருக்கு தெரியாது.
இதே சொல்ல மட்டும்தான் லாயக்கு
NEET exam கண்டிப்பாக M.P தேர்வு முறைக்கு அவசியம், இல்லையென்றால் இந்த மாதிரி அரை கிறுக்குகள் உடன் பணி செய்ய வேண்டியிருக்கும் .
அரைவேக்காட்டுத்தனமாக எந்த புரிதலும் இல்லாமல், அரசியல் காழ்ப்புணர்ச்சி ஒன்றையே மையமாகக் கொண்டு பிதற்றிவரும் ஒரு ஜந்துவை, பப்பு என்று அழைப்பதில் தவறென்ன?
Wow very good question. Govt of India must respond with proper justification
wow another baffoon here
did you or him wake up from coma??? Indian ship allowed from Straight of Ormez
இந்த அறிவு ஜீவி யின் மூளைககு இந்த வருட நோபல் பரிசு சுடலை கையால் கிட்டும்
திரு ராகுல் காந்தி அவர்கள் இந்த கேள்வியை டிரம்ப் அவர்களிடம் கேட்டால் இன்னும் சரியாக இருக்கும் ..அவரும் சரியான பதிலை கூறுவார் . நம்முடைய நாட்டில் இருந்து பெருவாரியாக உற்பத்தி பொருட்கள் அமெரிக்கா க்கு ஏற்றுமதியாவதால் , அதீத வரி விதிப்பை தவிர்க்க நிதானமாக நடந்து கொள்கிறார் . ஏனெனில் பாதகம் ஜனங்களுக்குத்தான் . உங்களை போல மேல் தட்டு மக்களுக்கு இல்லையே ...
இந்த வாய்தான், அமெரிக்கா நம் நாட்டின் மீது கூடுதல் வரி விதித்த பொழுது, நாம் ரஷ்யாவிடம் பெட்ரோலியம் வாங்கி அமெரிக்காவை பகைத்துக்கொண்டதால் அதிக வரி விதிப்பு என்று பேசியது.. இப்பொழுது அதே வாய் மாற்றி பேசுகிறது.. விஷ-பாம்பிற்கு ரெட்டை நாக்கு..
தமிழகத்தில் மூடர்கள் கூட்டம் அதிகரித்துவிட்டது என்று நினைத்து, திமுகவின் "கொத்தடிமை" ஊடகங்கள் இரவு பகலாகப் பொய்ச் செய்திகளைப் பரப்புகின்றன. இன்று பெட்ரோல், நாளைக்கு "காற்று கிடைக்காது" என்று சொன்னால் கூடப் பிளாஸ்டிக் கவரில் காற்றை நிரப்பி வைப்பார்கள் என்று நம்மை இகழ்வாக நினைக்கிறார்கள்.
குளிரூட்டப்பட்ட அறையில் உட்கார்ந்து கொண்டு, மக்களின் வயிற்றில் அடித்து அரசியல் லாபம் பார்க்கும் இந்த திமுக - காங்கிரஸ் கூட்டணியின் சதியை முறியடிப்போம்
வதந்திகளை நம்பாதீர்கள் தற்காலிகத் தட்டுப்பாட்டை நீங்களே உருவாக்கி கொள்ளாதீர்கள். வலிமையான தலைமைக்கு, பிரதமர் மோடிக்குத் துணை நிற்போம்மேலும்
-
தினந்தோறும் பாலியல் குற்ற சம்பவங்கள்; தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம்
-
தமிழகத்தில் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை குறைவு: உள்துறை செயலர், டிஜிபி பேட்டி
-
அமெரிக்கா, இஸ்ரேல் உடனான போர் முடிவுக்கு வர வேண்டுமா: 3 நிபந்தனை விதிக்கிறது ஈரான்
-
40 நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி: பற்றாக்குறை இல்லை என மத்திய அரசு உறுதி
-
மோனலிசாவிற்கு கல்யாணம்.
-
எனது செயல்பாடுகள் அனைத்தும் பாரபட்சமற்றவை; லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா