ஆட்சியை இழந்தது திமுக; முதல்வர், அமைச்சர்கள் படுதோல்வி
நமது சிறப்பு நிருபர்
2026 தமிழக சட்டசபை தேர்தலில், திமுக படுதோல்வி அடைந்தது. தவெக., அதிக எண்ணிக்கையிலான தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
தமிழகத்தில் நடிகர் விஜயின் தவெக, 110 தொகுதிகளில் முன்னிலை மற்றும் வெற்றிமுகத்தில் இருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் தோல்வி அடைந்துள்ளார். அமைச்சர்கள் பலரும் படுதோல்வி அடைந்துள்ளனர். தமிழகத்தில் 2021ல் ஆட்சிக்கு வந்த திமுக, ஐந்தாண்டுகளில் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை சம்பாதித்தது. அதிமுகவில் ஏற்பட்ட இபிஎஸ், ஓபிஎஸ் பிளவுக்கு தங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று கருதி, தன் மகன் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவியை கொடுத்தார் முதல்வர் ஸ்டாலின்.
இந்த செயல், பொதுமக்கள், பிற கட்சியினர் மட்டுமின்றி, சொந்த கட்சியினர் மத்தியிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அது மட்டுமின்றி, துறை அமைச்சர்கள் சரமாரியாக ஊழல்களில் ஈடுபட்டனர். டெண்டர் விடுவதில் தொடங்கி, அரசு பணி நியமனம், குவாரிகளில் கல், மண், எம் சாண்ட் கொண்டு செல்வது வரை எல்லாவற்றிலும் ஊழல் நடந்தது.
அமைச்சர்களே முன்னின்று ஊழல் செய்வதாக அமலாக்கத்துறை ஆதாரங்களுடன் குற்றம் சாட்டியது. ஆனாலும், எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அமைச்சர்களை பாதுகாத்தது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு. எந்த வேலையும் செய்யாமல் விளம்பரம் மட்டுமே செய்து கொண்டிருப்பதாக, சரமாரியாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
வேங்கைவயல் உள்ளிட்ட பல சம்பவங்களில் அரசு மெத்தனமாக நடந்து கொண்டதாக கூட்டணி கட்சியினரே குற்றம் சாட்டினர். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர், 'இவர்கள் ஏதோ பொற்கால ஆட்சி நடத்துவதாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர்' என்று கிண்டல் செய்யும் அளவுக்கு திமுக ஆட்சியின் மீது பல விமர்சனங்கள் இருந்தன.இருந்தாலும், முதல்வர் ஸ்டாலின் அவற்றை கண்டு கொள்ளவில்லை. மக்கள் தன்னை அப்பா அப்பா என்று அன்போடு அழைப்பதாக பெருமிதமாக கூறிக் கொண்டார்.
எந்த வேலையும் செய்யாமல், சென்னைக்குள் கார் பந்தயம் நடத்தி மக்களுக்கு தொல்லை கொடுத்த உதயநிதி சிறப்பாக செயல்படுவதாக பாராட்டுப் பத்திரம் வேறு வாசித்தார். இப்படி பல முனையிலும் தோல்வி கண்ட திமுக அரசுக்கு, இந்த தேர்தலில் மக்கள் பாடம் கற்பித்துள்ளனர்.
புதிதாக தொடங்கப்பட்ட விஜய்யின் தவெக ஆட்சியை கைப்பற்றுகிறது. கட்சி தோல்விமுகத்துக்கு சென்றதை தொடர்ந்து திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் வெறிச்சோடியது. கூடியிருந்த தொண்டர்கள், சோகத்துடன் கலைந்து சென்றனர்.
வாசகர் கருத்து (90)
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
04 மே,2026 - 21:12 Report Abuse
தமிழகத்தில் திமுக ஒழிந்தது மகிழ்ச்சி. மேற்குவங்கத்தில் மமதாவின் திரிணாமுல் காங்கிரஸ் ஒழிந்தது. இரட்டிப்பு மகிழ்ச்சி. இனி இந்த இரண்டு கட்சிகளுமே தலையெடுக்கக்கூடாது போதுமடா சாமி அவர்கள் செய்த அக்கிரமங்கள், அநியாயங்கள். 0
0
Reply
Arul. K - Hougang,இந்தியா
04 மே,2026 - 20:57 Report Abuse
விஜய் இந்த வெற்றியை எதிர்பார்த்திருக்க மாட்டார். ஆனால் விஜயின் மனநிலை, ஒரு சினிமாவில் செந்தில் நீச்சல் தெரியாத கவுண்டமணியை செந்தில் கிணற்றில் தள்ளிவிடுவார். கரையேறி வந்த கவுண்டமணி என்னை யார்ரா தள்ளிவிட்டது யார்ரா தள்ளிவிட்டது என்று கேட்பார். அது போல மக்கள் தள்ளிவிட்டனர். பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். பணத்த்தையும் பெற்றுக்கொண்டு மாற்றத்தை கொண்டுவந்த மக்களுக்கு நன்றி. இனிமேல் தான் அரசியலில் யாரும் கொம்பன் இல்லை என்ற பயம் வரும் 0
0
Reply
Oviya Vijay - ,
04 மே,2026 - 20:55 Report Abuse
0
0
Reply
Dum - ,இந்தியா
04 மே,2026 - 20:35 Report Abuse
Every action has a equal reaction and this is the rule of NATURE. Dmk has a lot more to suffer 0
0
Reply
நாகா - ,
04 மே,2026 - 20:20 Report Abuse
பாலும் தேனும் ஆறாக ஓடும் என்று கதாநாயகன் மீது வைத்த நம்பிக்கை நிறைவேறுமா ?
8 கோடி ரூபாய் மதிப்பு காருக்கு லட்சக்கணக்கான ரூபாய் வரி செலுத்துவதை எதிர்த்து நீதிமன்றங்களுக்கு சென்ற நபரிடம் என்ன மாதிரியான ஆட்சி நிர்வாகம் இருக்கும். அந்த காருக்கான வரி மூலம் தான் சாலை உட்பட கட்டமைப்பு செலவீனம் நடக்கிறது என்பதை கூட புரிந்து கொள்ள முடியாத ஒரு கூட்டம் தான் இருக்கிறது என்பதை வைத்து படிப்பறிவின் பயன்பாடுகள் தமிழகத்தில் எந்த அளவுக்கு இருக்கிறது என்பது புரிந்து கொள்ள முடிகிறது. இந்த அளவுக்கு தான் கல்வி கூடங்கள் இயக்கப்படுகின்றன என்பது தான் நிதர்சனம். இந்த கல்விக்கூடங்கள் நடத்துபவர்கள் யார் அவர்களின் உண்மையான நோக்கம் என்ன என்பதை புரிந்து கொள்ள முடியாத வரை இங்கு எது வேண்டுமானாலும் நடக்கும். அது நேர்மையாக இருக்காது என்பது மட்டும் உண்மை. 0
0
Reply
உண்மை கசக்கும் - Chennai,இந்தியா
04 மே,2026 - 19:17 Report Abuse
s://www.tn.gov.in/minister_list.php
இந்த அரசு வெப்சைட்டில் முதல்வர் மற்ற அமைச்சர்கள் பக்கத்தை காணோம். தூக்கிட்டாய்ங்க 0
0
Reply
SS Shiv - ,இந்தியா
04 மே,2026 - 19:07 Report Abuse
டோப்பாக்கு நிறைய ரெஸ்ட் + சொறிஞ்சி விடறதுக்கும் நிறைய டைம் கிடைக்கும். ஆனந்தமா சொறிஞ்சி விட்டுட்டே இருக்கலாம். 0
0
Reply
Rathna - Connecticut,இந்தியா
04 மே,2026 - 19:06 Report Abuse
சனாதனத்திற்கு கொசு மருந்து அடிப்பேன் என்று சொன்ன நபர்களுக்கு சனாதன வெள்ளை சங்கு ஊதப்பட்டு உள்ளது.
திருப்பரங்குன்றம் முருகன், தனது வேலால் அசுர சக்திகளை சூர சம்ஹாரம் செய்து விட்டான். 0
0
Reply
vbs manian - hyderabad,இந்தியா
04 மே,2026 - 19:03 Report Abuse
எப்படியெல்லாம் ஆட்டம் போட்டார்கள். ஆணவம் அஹங்காரத்துக்கு சம்மட்டி அடி. 0
0
Reply
vbs manian - hyderabad,இந்தியா
04 மே,2026 - 19:02 Report Abuse
தக்ஷிணேஸ்வர காளி மேற்கு வங்க தையும் திருபெரும்குன்றம் முருகன் தமிழகத்தையும் காப்பாற்றி விட்டனர். கோடானு கோடி நமஸ்காரம். 0
0
Reply
மேலும் 80 கருத்துக்கள்...
மேலும்
Advertisement
Advertisement