பாட்மின்டன்: அஷ்மிதா ஏமாற்றம்
கோலாலம்பூர்: மலேசிய மாஸ்டர்ஸ் பாட்மின்டன் காலிறுதியில் இந்தியாவின் அஷ்மிதா தோல்வியடைந்தார்.
கோலாலம்பூரில் மலேசிய 'மாஸ்டர்ஸ் சூப்பர் 500' பாட்மின்டன் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் தகுதிச்சுற்றில் அசத்தி, பிரதான சுற்றுக்கு முன்னேறிய இந்தியாவின் அஷ்மிதா சலிஹா ('நம்பர்-71'), காலிறுதிக்கு முன்னேறினார்.
இதில் நேற்று இத்தொடரின் 'நம்பர்-8' வீராங்கனை, டென்மார்க்கின் லின் ஹோஜ்மார்க்கை எதிர்கொண்டார். முதல் செட்டை அஷ்மிதா 23-21 என போராடி கைப்பற்றினார். அடுத்த செட்டை 18-21 என இழந்தார். வெற்றியாளரை முடிவு செய்யும் மூன்றாவது, கடைசி செட்டை 11-21 என எளிதாக நழுவவிட்டார்.
ஒரு மணி நேரம், ஒரு நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் அஷ்மிதா 23-21, 18-21, 11-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சரியும் சந்தையில் ஏறும் 'பார்மா' பங்குகள்
-
'கடவுள் சொத்தை திருடியவர்கள் தப்ப முடியாது' சபரிமலை தங்கம் விவகாரத்தில் அமைச்சர் அதிரடி
-
தெருநாய்கள் தொல்லை :சுப்ரீம் கோர்ட் நெத்தியடி!
-
மேற்கு வங்கம் பால்டா தொகுதியில் 1 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் பா.ஜ., வெற்றி
-
மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கையை மாற்றும் வாய்ப்பு!
-
இதே நாளில் அன்று
Advertisement
Advertisement