அமலாக்கத்துறையிடம் வசமாக சிக்கினார் இன்னொரு திமுக மாஜி!

30

நமது சிறப்பு நிருபர்



சட்ட விரோத பணப் பரிமாற்ற மோசடி வழக்கில், மற்றொரு மூத்த திமுக தலைவரும், முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குத் தொடர அனுமதி கோரி, தவெக அரசை அமலாக்கத்துறை நாடி உள்ளது.

முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திருச்செந்துார் தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சி தோல்வியை தழுவியதால் மற்ற திமுக நிர்வாகிகள் அனைவரும் அமைதியாகி விட்டனர். எனினும், அனிதா ராதாகிருஷ்ணன், கடந்த சில நாட்களாக நன்றி தெரிவிப்பு கூட்டம் நடத்தி, பல்வேறு அரசியல் கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் தான், சட்ட விரோத பணப் பரிமாற்ற மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், அவர் மீது வழக்குத் தொடர ஒப்புதல் கோரி, அமலாக்கத்துறை தமிழக அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளது. மற்றொரு முக்கியப் புள்ளியான முன்னாள் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்குத் தொடர அனுமதி கோரி அமலாக்கத்துறை கடிதம் எழுதிய ஐந்து நாட்களுக்குப் பிறகு, இந்தக் கடிதம் வந்துள்ளது.

தமிழக அரசு அந்தக் கடிதங்கள் இரண்டையும் பெற்றுக்கொண்டதை உறுதிப்படுத்தியிருப்பதாகவும், ஆனால் இதுவரை அவற்றுக்கு எந்தப் பதிலும் அளிக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமலாக்கத்துறை அனுப்பிய அந்த நான்கு பக்க கடிதத்தில், 'பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா'வின் (BNSS) பிரிவு 218-ஐச் சுட்டிக்காட்டியுள்ளது. அதன்படி, கடிதம் பெறப்பட்ட 120 நாட்களுக்குள் வழக்குத் தொடர அனுமதி வழங்கப்படாவிட்டால், அந்த ஒப்புதல் வழங்கப்பட்டதாகவே கருதப்படும் என்று அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


பிரத்யேக வீடியோ!

திமுகவுக்கு பேரிடி; இறங்கி செய்யும் அமலாக்கத்துறை; சிக்கலில் திமுக மாஜி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் குறித்து பிரத்யேக வீடியோ தினமலர் யூடியூப், வெப்சைட் உள்ளிட்டவற்றில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

வீடியோ பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

https://www.youtube.com/watch?v=NIELDrNWnss

Advertisement