மோடிக்கு மசாலா பொரி கொடுத்த வியாபாரிக்கு கொலை மிரட்டல்; திரிணமுல் கட்சியினர் அட்டூழியம்
நமது நிருபர்
கொல்கட்டா: மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடிக்கு மசாலா பொரி வழங்கிய வியாபாரி விக்ரம் சாவ், தனக்கு கொலை மிரட்டல் வந்ததாக போலீசில் புகார் அளித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்துக்கு சென்ற பிரதமர் மோடி, ஜார்கம் பகுதியில் ஒரு பெட்டிக்கடையில் மசாலா பொரி வாங்கி சாப்பிட்டார். அந்த போட்டோ, வீடியோ ஆகியவை இணையத்தில் வைரல் ஆகின.
இதைப் பார்த்து அப்போது ஆட்சியில் இருந்த திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர் கொந்தளித்து, சம்பந்தப்பட்ட வியாபாரிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். குண்டு வீசி அழித்து விடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட வியாபாரி கூறியதாவது: எனக்கு கொலை மிரட்டல் விடுத்து அழைப்பு வந்தது. தினமும் மிரட்டல்கள் வந்து கொண்டே இருக்கின்றன. குண்டு வீசி கடையை அழித்து விடுவோம் என்று மிரட்டுகின்றனர். இது பற்றி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளேன். தற்போது எனக்கு போலீசார் தரப்பில் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இது தொடர்பாக மேற்கு வங்க அமைச்சர் திலீப் கோஷ் கூறியதாவது:
நாட்டில் பதற்றத்தை உருவாக்கும் நோக்கம் கொண்ட இதுபோன்ற முயற்சிகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
சில தனிநபர்கள் இதுபோன்ற செயல்கள் மூலம் அமைதியைக் குலைக்க முயற்சிக்கின்றனர். அவர்களுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும். சிலர் இதுபோன்ற செயல்களைச் செய்து இந்தியாவில் பதற்றத்தை உருவாக்குகிறார்கள்.
அந்த காலம் இப்போது கடந்துவிட்டது. இப்போது இருப்பது நமது அரசு. எல்லாவற்றிற்கும் நல்ல முறையில் பதிலளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். இந்த கொலை மிரட்டலை திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர் விடுத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்தியாவின் இறையாண்மைக்கு வேட்டு வைத்த மம்தா பேனர்ஜியை கைது செய்து சிறையில் தள்ள வேண்டும். மம்தா எவ்வளவு கொடூரமானவர் என்பதற்கு தேர்தல் பிரசார வீடியோக்கள் நிறைய உள்ளன. அவற்றில் ஒன்றில் மம்தா கூறுகிறார் -மேற்கு வங்காள மக்களே உங்களை ஒரு ""கம்யூனிட்டியினர்"" சுற்றி வளைத்து ""கேரோ"" செய்தால்.... உங்களைக் காப்பாற்ற இந்த மம்தா தீதியால் மட்டும் தான் முடியும். ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள், """என்னால் மட்டும் தான் உங்களை பாதுகாக்க முடியும் """".. இதைவிட ஓப்பனாக சந்தன வீரப்பன் கூட பேசியதில்லை. இந்தியர்களே எக்காரணம் கொண்டும் மம்தாவின் கட்சி மறுபடி தலை தூக்க கூடாது. உணர்ந்தால் தான் மம்தாவின் கடைசி முயற்சியான மேற்கு வங்கத்தை பங்களாதேசத்துடன் இணைக்கும் கபட எண்ணம் தவிடு பொடியாகும். மேற்கு வங்கத்தில் எந்த வளர்ச்சியும் நடைபெறவில்லை உஷார் இந்திய மக்களே
ஒரு கடுமையான சார்ஜிகல் ஸ்ட்ரைக் பங்களாதேஷின் மீது நடத்த வேண்டும்.
தமிழகத்தில் திமுகவை போல் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸும் அடித்து விரட்டியடிக்கப்பட்ட வேண்டிய தீய சக்திகள்.
இந்த கொலை மிரட்டல் பாகிஸ்தானில், பங்களாதேஷில் இருந்து மர்ம அமைதி வழி திரிணாமுல் ஆதரவாளர்கள் இடம் இருந்து வந்து உள்ளது. பொறி கடைக்கு இப்போது போலீஸ் பாதுகாப்பு. மம்தாவின் அக்கிரமங்கள் அந்த அளவு போகிறது.
அமெரிக்காவின் வெளி உறவு அமைச்சர் மார்க் ரூபியோ கல்கத்தாவில் உள்ள தெரசாவின் நிறுவனத்திற்கு இன்று வந்து உள்ளார். அதற்கு முன்னால் நேற்று தெரசாவின் நிறுவனத்த்தை சேர்ந்த இரண்டு கன்யாஸ்த்ரீகளை தனது வீட்டில் சந்தித்து உள்ளார். அமெரிக்கா, நாட்டின் கிழக்கு பகுதியை உடைக்கும் எண்ணத்தில் உள்ளபோது, இந்த மறைமுக சதி திட்டம் வெளியில் வந்து உள்ளது.
மம்தாவினுடைய 15 வருட ஆட்சி காலம் அங்கே இருக்கும் விந்துக்களுக்கு எப்படி இருந்திருக்கும் என்று பாருங்கள்
THIS IS THE END OF CUT MONEY MAFIA IN WEST BENGAL.
A BOLD BENGAL, WITH THE BLESSINGS OF NETAJI BOSE - UNDER THE GUIDANCE OF MODIJI WILL BE DRIVEN BY SUVENDUJI TO PEACE & PROSPERITY,
மீண்டும் ஆட்சுஹிக்கு வரமுடியாது என்று த்ருணாமூல் முடிவு செய்து விட்டது .....
மிகவும் மோசமான கும்பல் இந்த திரிணாமுல் கட்சியினர். அவர்கள் அனைவரும் நாடுகடத்தப்படவேண்டும்.
இன்னுமா போன்கால் டிரேஸ் பண்னலா
Anarchistமேலும்
-
எபோலா வைரஸ் பரவல் எதிரொலி: போகக்கூடாத நாடுகள் பட்டியல் வெளியிட்டது மத்திய அரசு
-
தாய், மகன் இருவரும் பிரிட்டனில் மேயர்; ஹரியானா மாநிலத்துக்கு பெருமை
-
மின்வெட்டை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கணும்; இபிஎஸ்
-
ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் ஒரு திருப்புமுனை ஏற்படும்; சொல்கிறார் அதிபர் டிரம்ப்
-
நீங்கள்தான் அடுத்த பிரதமர்; ராகுலை குஷிப்படுத்திய பிரசாந்த்!
-
வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு; சந்தேக நபர் சுட்டுக்கொலை