ஸ்டாலினுக்கு விடாமல் முட்டுக் கொடுக்கும் திருமா
சென்னை: பதவி ஆசை காரணமாக அமைச்சரவையில் விசிக இணையவில்லை; தமிழக அரசியல் நெருக்கடி காரணமாக இம்முடிவை எடுத்தோம் என்பதை ஸ்டாலின் அறிவார் என விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சென்னையில் நிருபர்களிடம் திருமாவளவன் கூறியதாவது: கடந்த காலங்களில் நாங்கள் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றோம். திமுக கூட்டணியில் தொடர வேண்டும் என்பதற்காக அனைத்து முயற்சிகளையும் தேர்தலுக்கு முன்பாக நான் மேற்கொண்டேன். என்னை துருப்புச்சீட்டாக பயன்படுத்தி திமுக கூட்டணியை சிதறடிக்க பார்த்தார்கள். நான் ஒருபோதும் இடம் தர மாட்டேன் என்று செயல்படுத்தி காட்டினேன். இதில் யாரும் மாற்றுக்கருத்து சொல்ல முடியாது. எதிர் கருத்தை சொல்ல முடியாது.
இரண்டு ஆண்டுகளாக என்னை குறிவைத்து, சமூக ஊடகங்களில் விவாதித்தார்கள். என்னை குறி வைத்து ஜாதிய மதவாத சக்திகள் காய்களை நகரத்தினார்கள், என்னுடைய உணர்ச்சிகளை தூண்டினார்கள். திட்டமிட்டு அவதூறுகளை பரப்பினார்கள். ஆத்திரம் மூட்டினார்கள் எதற்கும் நாங்கள் மசியவில்லை. திமுக கூட்டணி வலுவாக இருக்க வேண்டும் என்றும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக திமுக தலைவருக்கு என்னால் எவ்வளவு உறுதுணையாக இருக்க முடியுமோ அவ்வளவு நான் உறுதுணையாக இருந்திருக்கிறேன். தேர்தல் முடிவுக்கு பிறகு திமுக கூட்டணியை காப்பாற்றும் அளவுக்கான வலிமை என்னிடம் இல்லை.
காங்கிரஸ் எடுத்த முடிவுகளை தடுக்கும் வலிமை என்னிடம் இல்லை. கம்யூனிஸ்டுகளின் முடிவுகளை நிறுத்த எனக்கு வலிமை இல்லை. அதேபோல் இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் நிலைப்பாட்டிற்குள் என்னால் தலையீடு செய்ய முடியாது. ஆனால் சமூக வலைதளங்களில் என்னை மட்டும் குறிவைத்து அவதூறு கணை ஏவுவது என் என்று தெரியவில்லை.
நானே அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்ற கருத்து வந்தபோது நான் அதற்கு இணங்கவில்லை. அமைச்சரவையில் இடம்பெறுவது உறுதிபடுத்தப்பட்டபோது வன்னி அரசை பரிந்துரைப்பதே சரி என முடிவு செய்தேன். தவெக அமைச்சரவையில் இடம்பெற்றது குறித்து மேற்கொண்டு கருத்து சொல்வதற்கு எதுவுமில்லை. தேர்தல் நேரத்தில்தான் யாருடன் பயணிப்பது, கூட்டணி என்பது குறித்த முடிவுகளை எடுப்பது வழக்கம்.
அமைச்சரவையில் இடம்பெற விசிக எடுத்த முடிவுக்கு பதவி ஆசை காரணம் இல்லை. எங்களுக்கும் திமுகவுக்கு கொள்கை புரிதல் உள்ளது. தற்போது நிலவும் நெருக்கடியால் இந்த முடிவை எடுத்தோம் என்பதை ஸ்டாலின் அறிவார். எங்கள் நேர்மை, அரசியல் தூய்மையை களங்கப்படுத்த யாருக்கும் உரிமை இல்லை; அவசரப்படாமல் எங்கள் கட்சியின் வரையறை அடிப்படையில் முடிவு எடுத்தோம்.
நான் சர்வாதிகாரி இல்லை; ஜனநாயகவாதி; திமுக கூட்டணிக்கு நாங்கள் உறுதியுடன் இருந்ததை போகிற போக்கில் விமர்சிக்கக்கூடாது. ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்கிற எங்கள் முழக்கத்தை தான் கட்சியினர் வலியுறுத்தினர். காங்., இடதுசாரிகள் கூட்டணியில் இருந்து விலகிச் செல்வதை என்னால் தடுக்க முடியவில்லை. தேர்தலுக்கு பிறகு தி.மு.க கூட்டணியை கட்டுக்கோப்பாக வைத்திருக்க நான் என்ன கூட்டணி தலைவரா? இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
மோசமான வெரி பிடித்த ஜாதி எதிர்ப்பு என்கிற பெயரில் ஒரு வக்கீலாய்ய்ய காரணமில்லாமல் அடித்தது விடாமல் விரட்டி கொலை வெறி பிடித்து தலைய்யவனேயா ஆராயாமல் சாதாரண மக்களை ஜாதி வெறி கொண்டு தாக்கும் திருமா த்லைவன் பதவிக்கு தகுதி இல்லாத ஆள். பொறுமை ஒரு நிகழ்ச்சி நடக்கும் தருணத்தில் தன கீழ் தரமான ஜாதி வெறி புத்தியை காட்டும் போது ஒருவன் குண நலன் பற்றி கேள்வி எழுகிறது.
உலகமகா நடிப்புடா சாமி.... விஜய் அமைச்சரவையில் மந்திரி பதவி.... ஆனால் ஸ்டாலினுக்கு ஆதரவு.... ஈயம் பூசின மாதிரியும் இருக்கனும்.... பூசாத மாதிரியும் இருக்கனும்....அப்படி தானே ?
அப்போ தோழமை.... சுட்டுதல்.... தோழமை... குட்டுதல்... எல்லாம் இருக்குமா .... ஸ்டாலின் அவர்கள் ஆலோசனைப்படி.... அரசின் மீது விமர்சனம் செய்வீர்கள் தானே ?
பதவி ஆசையாய் இல்லாத ஒரு சந்நியாசி இவர் என்னடா எல்லாருடைய காதிலேயும் பூவையா சுற்றுகிறார் கேட்பவன் அறிவற்றவன் ஆக கேனையனாக இருந்தால், கேப்பையில் கேழ்வரகில் நெய் வழியும் என்று சொல்வார்கள் கேப்பையில் இயற்கையாகவே நெய் வடிய வாய்ப்பில்லை என்பதால் கேட்பவரின் அறியாமையை சாதகமாக பயன்படுத்திய பொய் சொல்வது போன்றே உள்ளது இதை மக்கள் நம்பி விடுவார்களா பதவி ஆசை யாரை விட்டது இவரும் மனிதன் தானே பிறகு ஏனிந்த நடிப்பு
முட்டு கொடுப்பதில் முனைவர் பட்டம் பெற்ற முரடன். மட்டையானாலும் கட்டையில் ஏறும் வரை இந்த குனிந்துகொண்டேதான் இருக்கும்.
விஜய் இவரை சந்திக்க சென்றபோது இவரது தொண்டர்கள் அனைவரும் ஆரவாரத்துடன் விஜய்யை வரவேற்றார்கள். அதை திருமா ரசிக்கவில்லை. விஜய்யோடு இணையாவிட்டால் அவரது தொண்டர்கள் எல்லோரும் விஜய்யோடு இணைந்து விடுவார்கள் என்ற பயம் திருமாவுக்கும் இரண்டாம் கட்டத் தலைவர்களுக்கும் பிடித்துக் கொண்டது. மேலும் தலித் மக்களுக்கு 7 அமைச்சுப் பதவிகள் கொடுத்த பின்னர் விஜய்யோடு இனைவதைவிட வேறு வழியில்லை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். இனி இவர்கள் திமுக கூட்டனியில் சேர்ந்தாலும் தவெக, தலித் வேட்ப்பாளர்களை இவர்களுக்கெதிராக நிறுத்தி இவர்களை தோற்கடித்து விடுவார்கள். எப்படியோ கொள்கைக் கூட்டனி என்ற கொள்ளைக் கூட்டணி உடைந்தது தமிழகத்திற்கு நல்லதே. திமுக தனித்து வென்றதாக சரித்திரம் இல்லை. திராவிடத்தின் வீழ்ச்சி ஆரம்பம். சிறுபான்மையினரை நம்பி இந்துக்களை அவமதித்த திமுக இனி இந்துக்களின் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்கவேண்டும்.
அட நீங்க வேற.... அவர்கள் வாய்கொழுப்பு இன்னும் போகவில்லை.... இந்துக்கள் இன்னும் சரியாக ஓட்டு போடவில்லை போல் தெரிகிறது... 6 சீட் மட்டுமெ வந்திருக்க வேண்டும்.... அப்போது தான் பெரியார் அவர்கள் சொன்னது போல்.... அலகு குத்தி... காவடி எடுப்பார்கள்.... அந்த நிலமை விரைவில் வரும் !!!
உங்க கட்சியே ஒரு ஜாதீய கட்சி . ஓ அந்த முஸ்லீம் லீக் உள்ள கூட்டணி மதச்சார்பற்ற கூட்டணியோ. என்னய்யா காதுல பூ சுத்தறீங்க.
த.வெ.கவின் அமைச்சரவையில் தனது கட்சிக்கு அமைச்சர் பதவி பெற்ற பின்பும் ஸ்டாலினுக்கு முட்டுக் கொடுக்கிறார் திருமா. அதற்கு காரணம் ஒன்று தமிழக மக்களுக்கு இவரது அரசியல் ஏதும் தெரியாது என திருமா நினைக்கிறார். அல்லது திருமாவின் பெரிய ரகசியம் ஏதோ ஒன்று ஸ்டாலினிடம் இருக்கிறது என சந்தேகிக்க வேண்டி இருக்கிறது.
யோவ் நீ சிவாஜியை விட அதிக வேடங்களில் நடிக்க முயற்சி செய்வதாலும், உன் புத்தி வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது. தவேக சங் பரிவாரால் உருவாக்கப்பட்டது என்று சொல்லிவிட்டு அந்த மந்திரி சபையில் சேர்ந்ததால் நீயும் ஒரு ஆர் எஸ் எஸ் என ஒத்துக்கொள். ஸ்டாலினிடம் ஒட்டி உறவாடியது காசுக்காக இப்போது விஜயையுடன் ஒட்டிக்கொண்டிருப்பது பதவிக்காக. எனவே உன் வேஷம் பலிக்காது மகனே. வன்னிய அரசு தேர்தல் பொது விஜயை பற்றி ஏசாத சொற்களே கிடையாது. இன்றி விஜயின் காலடியில். நாணமில்லாத சிறுத்தைகள். பேசாமல் சிறுத்தை பெயரை எடுத்துவிட்டு கழுதை புலி என பெயரை மாற்றுங்கள்.
பத்துப் பன்னன்டு வருசமா எத்தனை பொட்டி வாங்கி இருக்கரம்? அவ்வலாவ் சீக்கிரமா மறக்க முடியாய்யா? உப்ப மறந்தாக்கா பணத்தை வட்டியோட கேக்கும்ல ?மேலும்
-
எபோலா வைரஸ் பரவல் எதிரொலி: போகக்கூடாத நாடுகள் பட்டியல் வெளியிட்டது மத்திய அரசு
-
தாய், மகன் இருவரும் பிரிட்டனில் மேயர்; ஹரியானா மாநிலத்துக்கு பெருமை
-
மின்வெட்டை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கணும்; இபிஎஸ்
-
ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் ஒரு திருப்புமுனை ஏற்படும்; சொல்கிறார் அதிபர் டிரம்ப்
-
நீங்கள்தான் அடுத்த பிரதமர்; ராகுலை குஷிப்படுத்திய பிரசாந்த்!
-
வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு; சந்தேக நபர் சுட்டுக்கொலை