புதிய கிழக்கு இந்திய கம்பெனிகளாகும் பன்னாட்டு நிறுவனங்கள்:ஸ்ரீதர் வேம்பு எச்சரிக்கை

11


புதுடில்லி: '' கூகுள், மைக்ரோசாப்ட், பேஸ்புக் போன்றவை நவீன காலத்தில் கிழக்கு இந்திய கம்பெனிகளாக மாறும் அபாயம் உள்ளது என ஸோகோ நி றுவனத்தின் ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார்.


இது தொடர்பாக அவர் கூறியதாவது: மலிவான மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்துவிட்டு, மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்புகளை இறக்குமதி செய்வது தான் கிழக்கு இந்திய கம்பெனியின் அடித்தளமாக அமைந்தது என்பது வரலாறு. இதன் தாக்கம் நமக்கு எப்படி அமைந்ததுஎன்பது நமக்கு தெரியும்.


நமது மலிவான மூலப்பொருட்களை வேறொருவரிடம் ஒப்படைக்கிறோம். பிறகு அந்த பொருளின் மதிப்பு கூட்டல் நடைமுறைகள் அனைத்தும் வேறொரு இடத்தில் நடந்து அவற்றை நாம் இறக்குமதி செய்தால், அதுதான் காலனித்துவ பொருளாதாரத்தின் அடித்தளம். இதனை பின்பற்றி தான் கிழக்கு இந்திய கம்பெனி இந்தியாவை ஆதிக்கம் செய்தது.


இதேபோன்றுனா கூகுள், மைக்ரோசாப்ட், அமேசான், பேஸ்புக் ஆகிய நிறுவனங்கள், புதிய கிழக்கு இந்திய நிறுவனங்களாக மாறும் அபாயம் உள்ளது. அந்த அபாயம் குறித்து நாம் அறிந்து வைத்து இருக்க வேண்டும். இது கற்பனை கிடையாது. நமது வரலாற்றை பார்த்து நாம் வி ழிப்புடன் இருக்க வேண்டும்.


அது தான் உண்மையான ஆபத்து. அந்த நிறுவனங்களின் உயர்பதவிகளில் ஒரு இந்தியர் தலைமை செயல் அதிகாரி(சிஇஓ) ஆக உள்ளார் என்ற காரணத்தினால் யாரும் ஏமாற வேண்டும். இது பொருத்தமற்றது. அந்நாட்டில், யாரின் சட்டங்கள், இறையாண்மை, அதிகார வரம்பு நடைமுறையில் உள்ளன என்பதே முக்கியம். இவ்வாறு ஸ்ரீதர் வேம்பு கூறினார்

Advertisement