பி.எஸ்., மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் 26ம் தேதி குரு பெயர்ச்சி சிறப்பு பூஜை
புதுச்சேரி: மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் நாளை மறுநாள் 26ம் தேதி குரு பெயர்ச்சி சிறப்பு பூஜை நடக்கிறது.
நவக்கிரகங்களில் ஒருவரான குரு பகவன் வரும் 26ம் தேதி காலை 11 மணிக்கு, மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு இடம் பெயர்கிறார். குருப் பெயர்ச்சியை முன்னிட்டு, புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டியில் உள்ள சனீஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள 12 அடி உயர குரு பகவானுக்கு சிறப்பு பூஜை மற்றும் பரிகார பூஜை நடக்கிறது.
அன்று காலை 6 மணிக்கு கணபதி ேஹாமத்துடன் பூஜை துவங்குகிறது. தொடர்ந்து நவக்கிரக ேஹாமம், கோ பூஜை, மகாலட்சுமி ேஹாமங்கள் நடக்கிறது. தொடர்ந்து சந்தனாதி தைலம், நல்லெண்ணெய், அரிசி மாவு, மஞ்சள், சந்தனம், பால், தயிர், தேன், இளநீர், கரும்புச்சாறு உள்ளிட்ட 30 வகை நறுமணப் பொருட்களால் மகா அபிேஷகம் நடக்கிறது.
பின்னர் குருசாந்தி, நவக்கிரக சாந்தி, நட்சத்திர ேஹாமம், ராசி ேஹாமம், தட்சணாமூர்த்தி ேஹாமங்களை தொடர்ந்து மகா பூர்ணாஹூதி நடக்கிறது. தொடர்ந்து ராசி பரிகார ேஹாமங்களை தொடர்ந்து, 108 லிட்டர் பாலாபிேஷகம், 11:07 மணிக்கு கலசாபிேஷகம் நடக்கிறது. அதனைத் தொடர்ந்து குரு பகவானுக்கு யானை வாகனத்துடன் கூடிய பஞ்சலோக கவசத்தை, சிதம்பர கீதாராம் குருக்கள் சாற்றுகிறார்.
குரு பெயர்ச்சியை முன்னிட்டு நடக்கும் பரிகார ேஹாமங்களில் கலந்து கொள்பவர்களுக்கு குரு யந்திரம், கனகபுஷ்பராகம், ராசிக்கல், முடிக்கயிறு, தாயத்து, ரக்ைஷ முதலியவை வழங்கப்படும்.
மேலும்
-
எபோலா வைரஸ் பரவல் எதிரொலி: போகக்கூடாத நாடுகள் பட்டியல் வெளியிட்டது மத்திய அரசு
-
தாய், மகன் இருவரும் பிரிட்டனில் மேயர்; ஹரியானா மாநிலத்துக்கு பெருமை
-
மின்வெட்டை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கணும்; இபிஎஸ்
-
ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் ஒரு திருப்புமுனை ஏற்படும்; சொல்கிறார் அதிபர் டிரம்ப்
-
நீங்கள்தான் அடுத்த பிரதமர்; ராகுலை குஷிப்படுத்திய பிரசாந்த்!
-
வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு; சந்தேக நபர் சுட்டுக்கொலை