மதுபான ஆலைகளின் விதிமீறலுக்கு உடந்தையாக இருந்தால் நடவடிக்கை: அதிகாரிகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை

12

சென்னை: 'மதுபான ஆலைகள் அனைத்தும், விதிகளுக்கு உட்பட்டு இயங்குவதை உறுதி செய்ய வேண்டும். விதிமீறல் கண்டறியப்பட்டால், அதற்கு உடந்தையாக செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் எச்சரித்துள்ளார்.

தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை செயல்பாடு குறித்து, சென்னையில் அதிகாரிகளுடன் நேற்று, அமைச்சர் விக்னேஷ் ஆய்வு கூட்டம் நடத்தினார்.

இதில், துறை ஆணையர் கார்த்திகா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் விக்னேஷ் பேசியதாவது:

மனமகிழ் மன்றங்கள் முறையாக செயல்படுகின்றனவா என்பதை, மாவட்ட அளவிலான அதிகாரிகள் தணிக்கை செய்து, உறுதிப்படுத்த வேண்டும்.

கள்ளச்சாராயம் காய்ச்சுதல், விற்பனை போன்ற நடவடிக்கைகள் முற்றிலும் இல்லாமல், தொடர்ந்து தீவிரமாக கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும்.

மதுபான ஆலைகள் விதிமுறைகளுக்கு உட்பட்டு இயங்குவதை, கலால் மேற்பார்வை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.

ஏதேனும் விதிமீறல் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர்கள், உடந்தையாக செயல்படும் அதிகாரிகள் மீது, உடனே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

Advertisement