சட்ட விரோதமாக மது விற்றவர் கைது



அரவக்குறிச்சி, சின்னதாராபுரம் போலீ சார், பங்களா பேருந்து நிறுத்தம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்ட போது, அங்கு சட்டவிரோதமாக மது விற்ற சின்னதாராபுரம் தன்னாட்சி

யப்பன் கோவில் தெருவை சேர்ந்த தண்டபாணி, 55, என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் விற்பனைக்காக வைத்திருந்த, 4,000 ரூபாய் மதிப்புள்ள, 26 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Advertisement