மாரியம்மன் கோவில் விழா நாளை தேரோட்டம்

கரூர்:கரூர் மாரியம்மன் கோவில், வைகாசி திரு விழாவையொட்டி, நாளை தேரோட்டம் நடக்கிறது.

கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த, 10ல் கம்பம் நடுதலுடன் தொடங்கி நடந்து வருகிறது. 15ல் பூச்சொரிதல் ஊர்வலம், 17ல் காப்பு கட்டுதல் ஆகிய நிகழ்ச்சி நடந்தது. அதை தொடர்ந்து, நாள்தோறும் பல்வேறு சிறப்பு வாகனங்களில், உற்சவர் அம்மன் திருவீதி உலா நடந்து வருகிறது. நேற்று மாலை யானை வாகனத்தில், உற்சவர் அம்மன் திருவீதி உலா நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.

நாளை காலை, 7:05 மணிக்கு தேரோட்ட விழா நடக்கிறது. வரும், 26ல் மாவிளக்கு ஊர்வலம், பால் குடம் ஊர்வலம், அக்னி சட்டி எடுத்தல், 27ல் கம்பம் ஆற்றுக்கு செல்லுதல் ஆகிய நிகழ்ச்சி நடக்கிறது.

Advertisement