சிருங்கேரி சன்னிதானம் ஸ்ரீவிதுசேகர சுவாமிகள் நேபாளத்தில் யாத்திரை
சிருங்கேரி ஸ்ரீசாரதா பீட சன்னிதானம் ஸ்ரீவிதுசேகர பாரதி சுவாமிகள், நேபாளத்தில் ஆன்மிக யாத்திரை மேற்கொண்டுள்ளார்.நேற்று முன்தினம், நேபாள தலைநகர் காத்மண்டு வருகை தந்த அவருக்கு, அந்நாட்டு அரசின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. துாளி பாத பூஜை செய்யப்பட்டது.
காத்மண்டுவில் உள்ள ஸ்ரீபசுபதிநாதர் கோவிலுக்கு, நேற்று விஜயம் செய்த ஸ்ரீவிதுசேகர பாரதி சுவாமிகள், அங்கு நடந்த சிறப்பு பூஜையில் கலந்து கொண்டார். சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடத்தின் சார்பில் வழங்கப்பட்ட அபிஷேக பொருட்கள் நிரம்பிய வெள்ளி பாத்திரங்களைக் கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது.
சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடத்தின் சார்பில், சிவ அஷ்டோத்ரம் பொறிக்கப்பட்ட தங்க நாணயங்கள், பெரிய பதக்கம் இணைக்கப்பட்ட, மூன்று அடி தங்க மாலை, பட்டு வஸ்திரம் ஆகியவை, ஸ்ரீபசுபதி நாதருக்கு சமர்ப்பிக்கப்பட்டன.

வரும் 30ம் தேதி வரை, நேபாளத்தில் தங்கியிருக்கும் சுவாமிகள், பல்வேறு கோவில்களில் வழிபாடு செய்ய இருக்கிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இருப்பதாக, சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடம் தெரிவித்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் ஒரு திருப்புமுனை ஏற்படும்; சொல்கிறார் அதிபர் டிரம்ப்
-
நீங்கள்தான் அடுத்த பிரதமர்; ராகுலை குஷிப்படுத்திய பிரசாந்த்!
-
வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு; சந்தேக நபர் சுட்டுக்கொலை
-
நீண்டகால இலக்குகளில் கவனம் செலுத்தும் தலைவர்கள் மோடி, டிரம்ப்; அமெரிக்க வெளியுறவு அமைச்சர் புகழாரம்
-
வேலுமணி அழைப்பை தவிர்த்த அமித்ஷா
-
பலமுனை தாக்குதல்; சிக்கலான பாதையில் நாடு! இது, மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம்!
Advertisement
Advertisement