பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்; 30 பேர் உயிரிழப்பு; 50 பேர் காயம்

9

நமது நிருபர்



பாகிஸ்தானில் ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயிலை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

பாகிஸ்தானின் குவெட்டாவில் ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயிலைக் குறிவைத்து தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இந்த தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ரயில் தண்டவாளத்திற்கு அருகே வெடிகுண்டு வெடித்ததில் ரயிலின் ஒரு பெட்டி முற்றிலுமாக சேதமடைந்து உள்ளது. அருகிலுள்ள வீடுகள் மற்றும் வாகனங்களும் பலத்த சேதம் அடைந்துள்ளது.

தடைசெய்யப்பட்ட பலூச் விடுதலை ராணுவம் (பி.எல்.ஏ) இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. குவெட்டா கண்டோன்மென்ட்டிலிருந்து ரயிலில் பயணித்த பாகிஸ்தான் ராணுவத்தினரைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. மீட்பு ப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த விபத்தால், ரயில் தடம் புரண்டதுடன் பெரும் தீ விபத்தும் ஏற்பட்டது.

Advertisement