அதிமுகவில் தொடங்கியது சமாதானப்படலம்; இபிஎஸ் இடம் சரண் அடைந்தது வேலுமணி கோஷ்டி

13

சென்னை: அதிமுக கோஷ்டிகள் இடையே ஏற்பட்டிருந்த மோதல் நீங்கி, இன்று இரு தரப்பும் ஒன்றாக இணைந்தனர். எனினும், 3 எம்எல்ஏ.,க்கள் மட்டும் இந்த இணைப்புக்கு வரவில்லை.

தமிழக சட்டசபை தேர்தலில், த.வெ.க., 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தி.மு.க., 59; அ.தி.மு.க., 47 தொகுதிகளிலும் வென்றன.தேர்தல் தோல்வி விரக்தியால் அதிமுகவில், அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி தலைமையில் 22 பேர்; முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையிலான அணியில் 25 பேர் என, இரண்டு அணியாக கட்சி எம்.எல்.ஏ.,க்கள் பிரிந்தனர்.

வேலுமணி அணி ஆதரவால், 144 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவுடன் முதல்வர் விஜய், சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்தார்.அமைச்சரவையில், வேலுமணி தரப்பு அமைச்சர் பதவியை எதிர்பார்த்தது. ஆனால், அமைச்சரவை விரிவாக்கத்தின் போது, அ.தி.மு.க., சேர்த்து கொள்ளப்படவில்லை. இதனால், வேலுமணி தரப்பு எம்.எல்.ஏ.,க்கள் விரக்தி அடைந்தனர். சிலர் பழனிசாமி பக்கம் செல்லத்துவங்கினர்.

இதற்கிடையே அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர் ராஜினாமா செய்து ஆளும் கட்சியான தவெக பக்கம் சாய்ந்தனர். தங்கள் தரப்பு பலவீனம் அடைய தொடங்கியதை உணர்ந்த வேலுமணி தரப்பு எம்எல்ஏ.,க்கள் ஒவ்வொருவராக இபிஎஸ் பக்கம் சாயத் தொடங்கினர்.
நிலைமை விபரீதம் ஆன நிலையில் வேலுமணி தரப்பினர் இறங்கி சமாதானத்துக்கு வந்தனர். இன்று வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் இபிஎஸ் வீட்டுக்கு சென்று பேச்சு நடத்தினர்.

இதையடுத்து இரு அணிகளும் ஒன்றாக இணைந்ததாக எம்எல்ஏ.,க்கள் கூறினர். இந்த இணைப்புக்காக, சி.வி.சண்முகம், புவனகிரி அருண்மொழி தேவன், விராலிமலை விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் இபிஎஸ் வீட்டுக்கு வரவில்லை. இரு தரப்பினர் இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இது பற்றி இன்று மதியம் அதிமுக தலைவர்கள் பேட்டி அளிப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Latest Tamil News

@block_G@

குழு தலைவர் இபிஎஸ்

நம்பிக்கை ஓட்டெடுப்பில் அரசுக்கு ஆதரவாக ஓட்டளித்த அதிமுக எம்எல்ஏ.,க்கள், இபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்களுடன் இணைந்து சபாநாயகரை சந்தித்தனர். தகுதி நீக்க நடவடிக்கை வேண்டாம் என்று கோரி கடிதம் அளித்தனர். சட்டசபை குழு தலைவராக இபிஎஸ், கொறடாவாக அக்ரி கிருஷ்ணமூர்த்தியை அங்கீகரிக்கும் வகையில் சபாநாயகரிடம் அதிமுக எம்எல்ஏ.,க்கள் இணைந்து கடிதம் அளித்தனர்.block_G

Advertisement