கோவை சிறுமி கொலை வழக்கு; 2 பேர் மீது குண்டாஸ்

7

கோவை: கோவை சூலுார் சிறுமி வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

கோவையில், 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளுக்கு விரைவாக கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

போலீசார் நடத்திய சோதனையில் சிறுமியின் பக்கத்து வீட்டை சேர்ந்த கார்த்திக், நண்பர் மோகன்ராஜ் ஆகியோரை கைது செய்யப்பட்டனர். இருவர் மீதும் போக்சோ மற்றும் கடத்தல் பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. இதில் கார்த்திக் தப்பிச் செல்ல முயன்றபோது ஏற்பட்ட விபத்தில் கை, கால்களில் முறிவு ஏற்பட்டதால் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறான்.

மோகன்ராஜ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது குற்றப்பத்திரிகை தயாரிக்கும் பணியை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் இன்று (மே 27)
மோகன்ராஜ் மற்றும் கார்த்திக் ஆகியோர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. மேற்கு மண்டல காவல்துறை தலைவர் ஐ ஜி ரம்யா பாரதி பரிந்துரையின் பெயரில் மாவட்ட கலெக்டர் பவன் குமார் உத்தரவிட்டார்.

Advertisement