போலீஸ் செய்திகள்

அலைபேசி வழிப்பறி

தேவகோட்டை:

தேவகோட்டை கணேசன் மகன் லட்சுமணன் 28. இவர் தானாவயல் கோயில் திருவிழாவை வேடிக்கை பார்க்க சென்றார். அவரை 30 வயதுள்ள 2 பேர் அவரை வழிமறித்து, அவரிடமிருந்த விலை உயர்ந்த அலைபேசியை வழிப்பறி செய்து தப்பினர். ஆறாவயல் போலீசார் விசாரிக்கின்றனர்.

///

பெண் கடத்தல் வழக்கு

சிறுவர்களிடம் விசாரணை

தேவகோட்டை:

தேவகோட்டை அருகே உள்ள கிராமத்து பெண்ணிடம், இன்ஸ்டாகிராம் மூலம் தஞ்சாவூர், கோயம்புத்துாரை சேர்ந்த இருவர் பழகினர். இருவரும் தேவகோட்டைக்கு வந்து அந்த பெண்ணை கடத்தி சென்றனர். வேலாயுதபட்டிணம் போலீசார் கடத்தி சென்ற பெண்ணை கண்டுபிடிக்க கர்நாடகாவில் தேடி ஒருவாரத்திற்கு பின் மீட்டனர். பெண்ணை கடத்தி சென்ற இரு சிறுவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

////



Advertisement