மத்திய அரசு தமிழகத்துக்கான பேரிடர் மேலாண்மை நிதியை தந்துள்ளது; செங்கோட்டையன் தகவல்

14

சென்னை: மத்திய அரசு தமிழகத்துக்கான பேரிடர் மேலாண்மை நிதியை தந்துள்ளது. பேரிடர் மேலாண்மை நிதி ரூ.ஆயிரம் கோடி வந்துள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.


சென்னையில் நிருபர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது: மக்கள் எண்ணங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும். மக்கள் விரும்பிய சிறந்த ஆட்சியை தமிழகத்தில் முதல்வர் விஜய் தந்து இருக்கிறார். ஜாதி சான்றிதழ் விரைந்து கிடைக்கவும், பத்திரப் பதிவு துறையில் உள்ள தேக்கங்களை நீக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பேரிடர் மேலாண்மை நிதி ரூ.1,000 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. மாநில அரசு கேட்ட நிதியை முன்கூட்டியே மத்திய அரசு வழங்கி உள்ளது. முதல்வரை பொறுத்தவரைக்கும் செயல்பாடு தான் முக்கியமாக நினைக்கிறார். நான் சொன்னதை செய்கிறோமா? முடிக்கப்பட்டு இருக்கிறதா?

மக்கள் மகிழ்ச்சி அடைகிறார்களா என்பதை தான் பார்க்கிறார், பத்திரிகையாளர்களை சந்தித்து அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வதை காட்டிலும் செயல்வடிவில் அவர்களது திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைவாகவே பெய்துள்ளது.
மாரிதாஸ் என்ன விதிகளின் கீழ் கைது செய்யப்பட்டு இருக்கிறார் என்று எனக்கு சட்ட ரீதியாக தெரியவில்லை. பத்திரிகை சுதந்திரம் என்பது முழுமையாக சுதந்திரம் வேண்டும். அது எப்படி இருக்க வேண்டும் என்று சொன்னால், மக்கள் வளர்ச்சி பணியில் இருக்க வேண்டும்.

தனிப்பட்ட விமர்சனங்கள் இல்லாமல் மக்கள் வளர்ச்சி பணிகள் எப்படி இருக்க வேண்டும் என்று பத்திரிகைகள் சொல்லும் போது பத்திரிகை சுதந்திரம் மட்டுமல்ல, நாடே வளர்ச்சி அடையும். இண்டி கூட்டணியில் இருந்து திமுக வெளியேறி இருக்கிறது. எங்கள் கொள்கை முடிவு என்ன என்பதை முதல்வர் தெரிவிப்பார். இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.

தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!

அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பு; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு


முழு பேட்டியை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Advertisement