நகை, பணத்துடன் தொலைத்த பர்ஸ் உரியவரிடம் ஒப்படைத்த போலீஸ்

முதுகுளத்துார்: முதுகுளத்துார் -தேரிருவேலி விலக்கு ரோட்டருகே நகை, பணத்துடன் கீழே கிடந்த பர்ஸ் உரியவரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

முதுகுளத்துார் அருகே மருதகம் கிராமத்தை சேர்ந்த தனவல்லி அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக முதுகுளத்துார் வந்தார். இவரது கையில் வைத்திருந்தத பர்ஸ் தொலைந்தது. இதில் ரூ.4000 பணம், 6 கிராம் தங்க தோடு இருந்துள்ளது.இதுகுறித்து முதுகுளத்துார் போலீசில் புகார் அளித்தனர்.

இதையடுத்து முதுகுளத்துார் எஸ்.ஐ., முகிலரசன் தலைமையிலான போலீசார் சிசிடிவி., கேமராக்களை ஆய்வு செய்து முதுகுளத்துார் -தேரிருவேலி விலக்கு ரோட்டில் கீழே கிடந்த பர்ஸை கண்டுபிடித்தனர். பின்பு டி.எஸ்.பி., சண்முகம் தலைமையில் போலீசார் தொலைத்த பர்ஸ்சை நேரில் வரவழைத்து உரியவரிடம் ஒப்படைத்தனர். பர்ஸ்சை விரைந்து கண்டுபிடித்த போலீசாரை மக்கள் பாராட்டினர்.

Advertisement