வாலிபர்களை தாக்கி வழிப்பறி: போலீஸ் ஏட்டு 'சஸ்பெண்ட்'
கடலுார்: விருத்தாசலத்தில் வாலிபர்களை தாக்கி வழிப்பறி செய்த போலீஸ் ஏட்டுவை, 'சஸ்பெண்ட்' செய்து எஸ்.பி., உத்தரவிட்டார்.
கடலுார் மாவட்டம், விருத்தாசலத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன் மகன் தினேஷ்குமார்,19; இவர், தனது நண்பர்கள் விருத்தாசலம் நல்லேந்திரன் மகன் சத்யநாராயணன்,18; பிரேம்குமார் மகன் ஜேக்கப்,18; ஆகியோருடன் கடந்த 7ம் தேதி மொபட்டில் பெரியார் நகர் அருகில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, விருத்தாசலம் காவல் நிலைய ஏட்டு ரஞ்சித், தனது நண்பர் விருத்தாசலம் பூந்தோட்டம் பகுதி சரித்திர பதிவேடு குற்றவாளி சுபாஷ் (எ) சுபாஷ் சந்திரபோஸ்,24; என்பவருடன் சேர்ந்து மதுபோதையில், தினேஷ்குமார் உள்ளிட்டோரை வழிமறித்து தாக்கினார்.
தொடர்ந்து, சத்யநாராயணனின் மொபைலை பறித்துச் சென்றார். இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து ரஞ்சித், சுபா ைஷ ஜூன் 8 கைது செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஏட்டு ரஞ்சித்தை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து எஸ்.பி., ஜெயக்குமார் ஜூன் 9 உத்தரவிட்டார்.
மேலும்
-
அரசு நிர்ணய விலையில் ஜல்லி, எம்.சாண்ட் விற்பனை
-
கோயிலில் மறுபூஜை
-
தினமலர் செய்தி எதிரொலி லோகோ வைக்கவும் ரோட்டில் பள்ளம் ஏற்படுத்திய குடிநீர் குழாய் கசிவு சீரமைப்பு
-
ரயில்வே ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
-
சட்டபை தேர்தல் செலவு கணக்கு விபரம் சமர்ப்பிப்பு
-
பிளாஸ்டிக் ஒழித்து நீர்நிலைகளை காக்க வேண்டும் தமிழக அரசிடம் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு