பெண்கள் அரசு பள்ளியில் ‘ரெயின் கோட்’ வழங்கல்

புதுச்சேரி: புதுச்சேரி அரசு சார்பில், ரெட்டியார்பாளையம் மக்கள் தலைவர் சுப்பையா அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு ரெயின் கோட்டு மற்றும் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சியில் நாராயணசாமி எம்.எல்.ஏ., கலந்து கொண்டு மாணவிகளுக்கு ரெயின் கோட் வழங்கினார். தொடர்ந்து அவரது சொந்த செலவில் ஏற்பாடு செய்திருந்த பள்ளி அடையாள அட்டையினை வழங்கினார். நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். 

Advertisement