மகாத்மா காந்தி பிறந்தநாள் கொண்டாட்டம்

சென்னை: மகாத்மா காந்தி 156வது பிறந்தநாளை ஒட்டி, சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு அருகில் உள்ள திருவுருவப்படத்திற்கு த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.


இந்நிகழ்வில் பொதுச் செயலாளர் ஜி.ஆர்., வெங்கடேஷ், மூத்த நிர்வாகிகள் திருவேங்கடம் சக்தி வடிவேல், பாஷா, மாவட்டத் தலைவர்கள் பிஜு சாக்கோ,கோவிந்த சாமி, பத்மநாபன், இலக்கிய அணி ரமேஷ் ,மகளிர் அணி நிர்வாகிகள் நந்தினி கன்னியப்பன், கல்யாணி உள்பட பலர் பங்கேற்றனர்

Advertisement