வகுப்பறையில் ஆபாச பேச்சு ஆசிரியர் மீது வழக்கு பதிவு

பரமக்குடி : ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு உதவி பெறும் தனியார் பள்ளியின் முதுகலை விலங்கியல் ஆசிரியர் வெங்கடேசன், 55.


இவர், பிளஸ் 2 வகுப்பில் பாடம் நடத்தியபோது, மாணவியர் மத்தியில் ஆபாசமாக பேசி, இனப்பெருக்கம் தொடர்பான படங்களை காண்பித்து, ஆபாசமான விளக்கம் கூறி, பாலியல் தொந்தரவு செய்யும் வகையில் பேசியதாக தலைமை ஆசிரியர் ஜஸ்டின் ஞானசேகரிடம் உதவி தலைமை ஆசிரியை சுமதி ஆக., 29ல் புகார் அளித்தார்.


இதன் அடிப்படையில் தலைமை ஆசிரியர் கொடுத்த புகாரில், மாணவியர் மத்தியில் பாலியல் உணர்வுகளை துாண்டும் வகையிலும், அவர்களின் விருப்பத்திற்கு எதிராக பேசியதாக வெங்கடேசன் மீது பரமக்குடி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்தனர்.

பள்ளியில் நடத்திய விசாரணையின் அடிப்படையில் வெங்கடேசனை தாளாளர் லெனின்குமார் தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளார்.

Advertisement