மாநகரில் கொட்டிய மழை; வீடுகளில் புகுந்த கழிவுநீர்

ஈரோடு: ஈரோடு மாநகரில் நேற்று மாலை, 4:௦௦ மணி அளவில் பரவலாக மழை பெய்யத் தொடங்கியது. முக்கால் மணி நேரம் இடைவிடாமல் கொட்டிய மழையால், பஸ் ஸ்டாண்ட், முனிசிபல் காலனி, பெருந்துறை ரோடு, பெரியவலசு, வீரப்பன்சத்திரம், மேட்டூர் ரோடு, சத்தி ரோடு, ஈ.வி.என். ரோடு, கருங்கல்பாளையம், சூரம்பட்டி உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.


வீரப்பன்சத்திரம் எம்.ஜி.ஆர்., வீதியில் சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பால், மழை நீருடன் கழிவு நீர் கலந்து, அப்பகுதி குடியிருப்புகளில் புகுந்தது. சாக்கடையை துார்வார மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement