19ல் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

ஈரோடு: ஈரோடு மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் வரும், 19 ல் ஈரோடு, வேளாளர் பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லுாரியில் காலை, 8:00 மணி முதல் மாலை, 4:00 மணி வரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்த உள்ளது.


வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, முகாமை துவக்கி வைத்து பணியாணை வழங்க உள்ளார். 200க்கும் மேற்பட்ட தனியார் துறை வேலை அளிப்போர், 10,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.

முகாமில், 8 ம் வகுப்பு தேர்ச்சி முதல் அனைத்து படிப்பு முடித்தோர், கணினி இயக்குவோர், ஓட்டுனர், செவிலியர், மருந்தாளுனர் என அனைத்து வேலை நாடுனரும் பங்கேற்கலாம். வேலை அளிப்போர், வேலை நாடுனரும் இலவசமாக பங்கேற்கலாம். விருப்பமுள்ளோர், https://forms.gle.dNSiFvdKSmMaFRx3A என்ற லிங்க்கில் பதிவு செய்யலாம். 0424 2275860 என்ற எண்ணிலும் விபரம் அறியலாம்.

Advertisement