சுவர் விழுந்து 3 மாடுகள் பலி
பெரம்பூர்:பெரம்பூர், குரு மூர்த்தி கார்டனை சேர்ந்தவர் தமிழ்மணி,47. இவர், இதே பகுதியிலுள்ள மாநகராட்சி பள்ளி சுற்றுச்சுவர் அருகே, தனக்கு சொந்தமான ஏழு மாடுகளை கட்டி வைத்திருந்தார். நேற்று மாலை, திடீரென சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து, சம்பவ இடத்திலேயே மூன்று மாடுகள் பலியாகின.
தகவலின்படி வந்த செம்பியம் தீயணைப்பு வீரர்கள், கட்டட இடிபாடுகளை அகற்றி, இறந்த மாடுகளின் சடலத்தை மீட்டனர். செம்பியம் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement