நாளை குறைதீர் கூட்டம்

ஈரோடு: ஈரோடு ஈ.வி.என்., சாலையில் உள்ள தெற்கு கோட்ட மின் வினியோக செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை காலை, 11:00 மணிக்கு மின் பயனீட்டாளர் குறைதீர் கூட்டம் நடக்க உள்ளது. ஈரோடு மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் கலைசெல்வி தலைமை வகிக்கிறார்.

ஈரோடு தெற்கு மின் கோட்டத்தை சேர்ந்த சோலார், கணபதிபாளையம், கொடுமுடி, சிவகிரி, கஸ்துாரிபாய் கிராமம், அரச்சலுார், எழுமாத்துார், மொடக்குறிச்சி, அனுமன்பள்ளி, முள்ளாம்பரப்பு பகுதி மின் பயனீட்டாளர் குறை, கோரிக்கைகளை தெரிவித்து தீர்வு பெறலாம்.

Advertisement