கல்விக் கொள்கையில் திடீர் மாற்றமில்லை!

சென்னை: ராஜ்யசபாவில் தி.மு.க.,வை விமர்சித்து மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசிய நிலையில், தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சர் மகேஷ் வெளிியட்ட அறிக்கையில், இந்தியாவின் பன்முகத்தன்மையே அதன் பலம் என்பதை மத்திய அரசு புரிந்துகொள்ள வேண்டும். வெற்றிகரமான கல்வி முறையை குறை மதிப்புக்கு உட்படுத்துவதால் தேசிய கல்விக் கொள்கையை தமிழகம் ஆரம்பம் முதலே எதிர்க்கிறது; திடீர் மாற்றம் ஏதுமில்லை.

மத்திய அரசின் எல்லா திட்டங்களையும் கண்ணை மூடிக் கொண்டு ஏற்க முடியாது. மாநிலத்திற்கு நன்மை தரும் திட்டங்களையே தமிழக அரசு ஏற்கிறது. தமிழக அரசின் கல்வி முன்மாதிரியானது. எதிர்காலத்தை வடிவமைக்கும் திறனுள்ளது எனக்கூறியுள்ளார்.

Advertisement