டிரான்ஸ்பார்மர் மீது மோதிய கார் 16 மணி நேரம் மின்சாரம் தடை

அவிநாசி: அவிநாசியில், டிரான்ஸ்பார்மர் மீது கார் மோதியது. இதனால், ஏற்பட்ட மின்தடை, 16 மணி நேரத்துக்கு பின் சீரானது.
அவிநாசி, கருவலுார் அருகே தொட்டக்களம்புதுார் பகுதியை சேர்ந்தவர், சசிகுமார் 42. அரசு போக்குவரத்து கழக அன்னுார் பணிமனையில் மெக்கானிக். தனது குடும்பத்தினருடன், நேற்று முன்தினம் பழநி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து விட்டு ஊருக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தார்.
நேற்று முன்தினம் அதிகாலை 2:00 மணியளவில் அவிநாசி, சீனிவாசபுரம் பகுதியில் கார் வந்தபோது ரோடு வளைவில் திருப்பாமல், இடதுபுற பள்ளத்தில் கார் இறங்கி, டிரான்ஸ்பார்மர் மீது பலமாக மோதியது. இதில், காரில் பயணம் செய்த சீனிவாசன் மற்றும் குடும்பத்தினருக்கு காயம் ஏற்படவில்லை.
டிரான்ஸ்பார்மர் மீது கார் மோதியதில், மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர். அவிநாசி போலீசார் மின்வாரியத்திற்கு தகவல் தெரிவித்தனர். நேற்று காலை மின் ஊழியர்கள் கிரேன் உதவியுடன் டிரான்ஸ்பார்மரில் சிக்கியிருந்த காரை மீட்டனர். பழுது சீரமைக்கப்பட்டு, நேற்று மாலை, 6:00 மணிக்கு தான் மின் வினியோகம் சீரானது.
மேலும்
-
நெல்லையில் பயங்கரம்; ஓய்வு பெற்ற எஸ்.ஐ. வெட்டிக் கொலை
-
என் நண்பர் அதிபர் டிரம்புக்கு நன்றி; ட்ரூத் சோஷியல் மீடியாவில் இணைந்த மோடி பதிவு
-
கல்விக்கடன் வழங்க லஞ்சம்: அரசு வங்கி ஊழியருக்கு 4 ஆண்டு சிறை சிறை; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
-
முதல்வர் வீட்டுக்கு வந்து பார்க்கட்டும் என்ன நடக்கும் என்பது தெரியும்: அண்ணாமலைக்கு ரகுபதி எச்சரிக்கை
-
சென்னை விமான நிலையத்தில் பயணியரை துரத்தும் நாய்கள்!
-
சென்னை தலைநகரா, கொலை நகரா; ஒரே மாதத்தில் 12 பேர் வெட்டிசாய்ப்பு