டாஸ்மாக் வழக்கு; வேறு மாநில நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி தமிழக அரசு மனு

புதுடில்லி: டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனைக்கு எதிரான வழக்கை, வேறு மாநில உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில், டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில், கடந்த மார்ச் 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை, அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. பின், 1,000 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்ததாக, அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது.
'அமலாக்கத் துறையின் இந்த சோதனை, அரசியலமைப்பு சட்டத்தின் கூட்டாட்சி அடிப்படை கட்டமைப்புக்கு விரோதமானது. விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் அதிகாரிகள், ஊழியர்களை துன்புறுத்தக் கூடாது' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக உள்துறை செயலர், டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது. வரும் 25ம் தேதி வரை எந்த மேல் நடவடிக்கையும் தொடர வேண்டாம்' என, அமலாக்கத் துறைக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதிகாரத்தை அமலாக்கத்துறை செயல்படுத்திய விதம் சரியில்லை என டாஸ்மாக் சோதனை விவகாரத்தில் அமலாக்கத்துறையை நீதிபதிகள் கண்டித்தனர்.
அடுத்த சில நாட்களிலேயே, வழக்கில் இருந்து விலகுவதாக நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் அமர்வு அறிவித்தது. இதையடுத்து, நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
இந்நிலையில், டாஸ்மாக் வழக்கை வேறு மாநில நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அரசின் கோரிக்கையை ஏற்று வழக்கை வரும் 7ம் தேதிக்கு பட்டியலிட நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வு ஒப்புதல் அளித்துள்ளது.
வாசகர் கருத்து (29)
Dharmavaan - Chennai,இந்தியா
04 ஏப்,2025 - 21:26 Report Abuse

0
0
Reply
Karthik - ,இந்தியா
04 ஏப்,2025 - 21:23 Report Abuse

0
0
Reply
SIVA - chennai,இந்தியா
04 ஏப்,2025 - 20:37 Report Abuse

0
0
Reply
SIVA - chennai,இந்தியா
04 ஏப்,2025 - 20:27 Report Abuse

0
0
Reply
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
04 ஏப்,2025 - 19:30 Report Abuse

0
0
Reply
Murthy - Bangalore,இந்தியா
04 ஏப்,2025 - 18:53 Report Abuse

0
0
Reply
kumarkv - chennai,இந்தியா
04 ஏப்,2025 - 18:36 Report Abuse

0
0
Reply
M Ramachandran - Chennai,இந்தியா
04 ஏப்,2025 - 18:21 Report Abuse

0
0
Reply
M Ramachandran - Chennai,இந்தியா
04 ஏப்,2025 - 18:10 Report Abuse

0
0
Reply
konanki - Chennai,இந்தியா
04 ஏப்,2025 - 17:42 Report Abuse

0
0
Reply
மேலும் 19 கருத்துக்கள்...
மேலும்
-
நானே பா.ம.க., தலைவர்: மகனது தலைவர் பதவியை பறித்தார் ராமதாஸ்
-
அரசுக்கு என்ன தயக்கம்? போக்குவரத்துத்துறை உதவியாளர்களுக்கு பணி நியமன ஆணை விவகாரம்; தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி
-
ரூ.30 லட்சம் ஹவாலா பணம், ஹெராயின் பறிமுதல்; பஞ்சாப் போலீசார் நடவடிக்கை
-
அமெரிக்க ஏ.டி.எப்., தலைமைப் பொறுப்பில் இருந்து காஷ் படேல் திடீர் நீக்கம்
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,680 உயர்வு; ஒரு சவரன் ரூ.68,400!
-
எங்கள் அரசு எப்போதும் பாடுபடும்: பிரதமர் மோடி உறுதி
Advertisement
Advertisement