கணித தேர்வில் 378 பேர் ஆப்சென்ட்

ராமநாதபுரம் : பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு கணிதம் பாடத் தேர்வில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 378 பேர் ஆப்சென்ட் ஆகியுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் 82 தேர்வு மையங்களில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு மார்ச் 28ல் துவங்கி ஏப்.,15 வரை நடக்கிறது.16 ஆயிரத்து 758 மாணவர்கள், தனித்தேர்வர்களாக 249 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

நேற்று முன்தினம் நடந்த கணிதம் பாடத்தேர்வில் மாணவர்கள் 357, தனித்தேர்வாளர்கள் 21 பேர் என 378 பங்கேற்கவில்லை.

ஏப்., 11ல் அறிவியல் பாடத்தேர்வு நடைபெற உள்ளது என கல்வித்துறை அதிகாரிகள் கூறினர்.

Advertisement