டிராக்டர் மீது லாரி மோதி டிரைவர் பலி; 18 பேர் காயம்

மயிலம் : விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே வி.சாலை கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர், 45.
இவர், நேற்று முன்தினம், மயிலம் முருகன் கோவில் முத்துப்பல்லக்கு திருவிழாவுக்கு, தன் உறவினர்களுடன் டிராக்டரில் சென்றார்.
சுவாமி தரிசனம் முடிந்து நேற்று காலை சொந்த ஊருக்கு புறப்பட்டனர். அதிகாலை, 4:15 மணிக்கு, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மயிலம் அருகே வந்த போது, வேகமாக வந்த லாரி, டிராக்டரின் பின்பக்கம் மோதியது.
இந்த விபத்தில், பலத்த காயமடைந்த பாஸ்கர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். டிராக்டரில் பயணம் செய்த நாகமுத்து, 44, புகழ்செல்வி, 36, உட்பட 18 பேர் காயமடைந்தனர்.
அனைவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். மயிலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மே 2ல் அ.தி.மு.க., செயற்குழுக் கூட்டம்
-
மாணவர், ஆசிரியரை அரிவாளால் வெட்டிய மாணவன்: நெல்லை பள்ளியில் அதிர்ச்சி
-
மத்திய -மாநில அரசு உறவு பற்றி ஆராய உயர்நிலைக் குழு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
-
பயம், அச்சம்... இல்லாமல் இருப்பதற்கு என்ன வழி?
-
நாங்க மாற முடியாது என எதிர்த்த ஹார்வர்ட் பல்கலை; நிதியை நிறுத்தி டிரம்ப் 'தடாலடி'
-
சத்குருவின் தமிழ் புத்தாண்டு வாழ்த்து!
Advertisement
Advertisement