ரேஷன் கடையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர் கைது

கடலுார்:கடலுார் அருகே சுப்ரமணியபுரத்தைச் சேர்ந்தவர் நாகராஜ், 42; ரேஷன் கடை விற்பனையாளர். அவருக்கு, 2022ம் ஆண்டு, சென்னையைச் சேர்ந்த பாஸ்கர், 58, அறிமுகமானார். சென்னை தலைமை செயலகத்தில் உள்ள முக்கிய நபர்களுடன் தனக்கு தொடர்பிருப்பதாகக் கூறிய பாஸ்கரை, நாகராஜ் நம்பினார்.
தன் மனைவி மற்றும் அதே ஊரைச் சேர்ந்த மேலும் இருவருக்கு, கிராம உதவியாளர் மற்றும் ரேஷன் கடை விற்பனையாளர் வேலை வாங்கித் தருமாறு கேட்டுள்ளார்.
அதற்கு, பாஸ்கர், 7 லட்சம் ரூபாய் கேட்டார். ஆறு தவணைகளில், 5.50 லட்சம் ரூபாயை பாஸ்கரிடம், நாகராஜ் கொடுத்துள்ளார். பாஸ்கர் வேலையும் வாங்கித் தராமல், பணத்தையும் திருப்பித் தராமல் ஏமாற்றி வந்தார்.
கடலுார் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் நாகராஜ் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து, சென்னை, புரசைவாக்கத்தைச் சேர்ந்த பாஸ்கரை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
2 நாட்களில் சவரனுக்கு தங்கம் விலை ரூ.2,280 சரிவு; ஒரு சவரன் ரூ.72,040!
-
பரத் என்ற பெயரைக் கேட்டதும் கொக்கரித்த பயங்கரவாதிகள்!
-
கடலூரில் ரூ.40 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்; சிக்கிய நவீத் அன்வரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை
-
சிந்து நதிநீர் ஒப்பந்தம் முறிப்பு; பாகிஸ்தானுக்கு வலிக்கும் இடத்தில் அடிக்கிறது இந்தியா!
-
காஷ்மீரில் இருந்து பத்திரமாக தமிழகம் திரும்பிய சுற்றுலாப் பயணிகள்; சொல்வது இதுதான்!
-
சில்லுகளை 'ஜில்'லாக்கும் லேசர்கள்
Advertisement
Advertisement