கள்ளச்சாராயம்; 2 பேர் கைது
மேட்டுப்பாளையம்,; காரமடை அருகே கள்ளச்சாராயம் காய்ச்ச முயன்ற இரண்டு கேரள மாநில இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் காரமடை அருகே கேரள வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள பில்லூர் டேம் அருகே போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, பில்லூர் டேம் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த இரண்டு நபர்களை போலீசார் விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த மருதன், 34 மற்றும் மற்றொரு மருதன், 28 என தெரியவந்தது. இவர்கள் குந்தா ஆற்றின் கரையோரம் கள்ளச் சாராயம் காய்ச்ச பயன்படுத்தும் சாராய பொருட்களை ஊற வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை காரமடை போலீசார் கைது செய்து, 30 லிட்டர் கள்ளச்சாரயம் காய்ச்ச பயன்படுத்தும் ஊறலை பறிமுதல் செய்தனர்.-
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பஹல்காம் சம்பவம்: பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் மத்திய அமைச்சர் எல்.முருகன் சந்திப்பு
-
சிகிச்சையில் சிறுத்தை மரணம்: வனத்துறை அதிகாரி மீது நடவடிக்கை
-
சீன உணவகத்தில் தீவிபத்து: 22 பேர் பலி
-
கனடா தேர்தலில் வெற்றி: மார்க் கார்னிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
-
நாட்டின் பாதுகாப்புக்காக ஸ்பைவேரை பயன்படுத்துவதில் தவறில்லை: சுப்ரீம் கோர்ட்
-
பார்லி., சிறப்பு கூட்டத்தொடர் வேண்டும்: பிரதமர் மோடிக்கு ராகுல் கடிதம்
Advertisement
Advertisement