பஹல்காம் சம்பவம்: பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் மத்திய அமைச்சர் எல்.முருகன் சந்திப்பு

கொச்சி: பஹல்காம் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை,
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு மற்றும் பார்லிமென்ட் விவகாரத்துறை இணையமைச்சர் எல்.முருகன் சந்தித்து ஆறுதல் கூறினார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 ஆம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பலியானார்கள். இது நாடு முழுவதும் பரவலான சீற்றத்தையும் துக்கத்தையும் ஏற்படுத்தியது.
பலியானவர்களில் என். ராமச்சந்திரனும் ஒருவர். இவரது குடும்பத்தினர் கேரள மாநிலம் கொச்சியின் எடப்பள்ளியில் வசிக்கிறார்கள்.
இந்த நிலையில், ராமச்சந்திரனின் குடும்பத்தினரை, மத்திய அமைச்சர் எல்.முருகன் இன்று பிற்பகல் அவரது வீட்டிற்கு சென்று துயரமடைந்த குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.சுமார் 30 நிமிடங்கள் தங்கி இருந்தார்.
இந்த வருகையின் போது, தாக்குதலில் இருந்து தப்பிய ராமச்சந்திரனின் மகள் ஆரத்தி, பள்ளத்தாக்குக்கு அவர்கள் மேற்கொண்ட பயணத்தின் போது நடந்த துயர சம்பவம் குறித்த துயரமான விவரத்தை அமைச்சரிடம் பகிர்ந்து கொண்டார். துக்கமடைந்த குடும்பத்தினருக்கு அவர், தனது ஒற்றுமையை வெளிப்படுத்தினார், மேலும் தனது அனுதாபங்களைத் தெரிவித்தார்.
மேலும்
-
வங்கதேச அணி முன்னிலை
-
இந்திய பெண்கள் 'திரில்' வெற்றி * சரிந்தது தென் ஆப்ரிக்க அணி
-
பதிலடி தருமா சென்னை * இன்று பஞ்சாப் அணியுடன் பலப்பரீட்சை
-
'பிளே ஆப்' செல்லுமா பஞ்சாப் * பிரப்சிம்ரன் சிங் நம்பிக்கை
-
சரக்கு ஏற்றுமதியில் தமிழகம், தெலுங்கானா ஏற்றம்
-
ஹரியானாவில் ஐஸ்கிரீம் விற்கும் பாக்., முன்னாள் எம்.பி.,: குடும்பத்தினர் மீது நாடு கடத்தல் நடவடிக்கை